தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் எனறு அழைக்கப்படுபவர் நயன்தாரா. வருடத்திற்கு பல படங்களில் நடித்து தனக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிவைத்துள்ளார். இவர் தற்போது சக்ரி டோலட்டி இயக்கிவரும் கொலையுதிர் காலம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. அப்போது அந்நிகழ்வில் பேசிய நடிகர் ராதா ரவி, நயன்தாரவை பற்றி வராதே செய்தியே இல்லை,அவரை நடிகையர் திலகம், புரட்சி தலைவி என்று அழைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார்.அதே சமயம் சீதையாகவும் நடிக்கிறார். பார்த்தவுடனே கும்பிடறவங்களும் நடிக்கிறார்கள், பார்த்த உடனே கூப்பிடுறவங்களும் நடிக்கிறார்கள்’ என்று ஆபாசமாகப் பேசினார்.
இந்நிலையில் இதை பார்த்து கடுப்பான நயன்தாராவின் காதலரும்,இயக்குநருமான விக்னேஷ் சிவன், ராதாரவியை கடுமையாக விமர்சனம் செய்து பதிவு வெளியிட்டுள்ளார்,அதில் ‘இது போன்ற இழிவான பேச்சிற்கு எதிராக எவரும் குரல் கொடுக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர் பெரிய புகழ் பெற்ற குடும்பத்தை சார்ந்தவர். மேலும் அடுத்தவரின் கவனத்தை பெறுவதற்காக மூளை இல்லாமல் இவர் பேசும் பேச்சை பார்த்து அனைவரும் கைத்தட்டுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
Clueless and helpless cos no one will support or do anything or take any action against that filthy piece of shit coming from a legendary family .. he keeps doing this to seek attention! Brainless !
Sad to see audience laughing& clapping for his filthy comments!
None of us— Vignesh Shivan (@VigneshShivN) March 24, 2019