தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் அனுப்பி வைத்தார்
வரும் 23ஆம் தேதி மாலை டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்து சோனியா காந்தி கடிதம் எழுதி இருக்கிறார்.
காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டம் வரும் 23ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது..
காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் நடக்கும் 23ம் தேதி தான் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பாஜ அரசின் மீது நாடுமுழுக்க கடும் அதிருப்தி நிலவி வந்தது. இந்த தேர்தலிலும் மோடி அரசு படு தோல்வி அடையும் என கூறப்படும் நிலையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் மிக முக்கியமாக கவனிக்கப்படுகிறது.
366 Views