திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

விஜய் – சிவகார்த்திகேயன் இருவரில் யார் ஹீரோ …!

விஜய் – சிவகார்த்திகேயன் இருவரில் யார் ஹீரோ …!

சிவகார்த்திகேயன் – மித்ரன் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு ஹீரோ என்று பெயரிடப்பட்டுள்ளது. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப்படத்தில் நடிகர் அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன், இவானா ஆகியோர் நடிக்கின்றனர். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் காக்கா முட்டை படத்திற்கு வசனம் எழுதிய ஆனந்த் அண்ணாமலை இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. விஜய் தேவரகொண்டா நடிக்கும் இந்தப் படத்துக்கும் ஹீரோ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.

சிவகார்த்திகேயன் பட டைட்டில் அறிவிக்கப் படுவதற்கு முன்பே விஜய் தேவரகொண்டா பட டைட்டில் ஹீரோ என்றும் பட விவரங்கள் அனைத்தும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒரே பெயரில் இரண்டு படங்கள் உருவாகி வருகிறது.

விஜய் தேவரகொண்டா படத்தால் மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

ஒரே பெயரை எப்படி இரண்டு பட நிறுவனங்களுக்கு தர முடியும் கவுன்சில் நிர்வாக குறைபாடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஹீரோ டைட்டில் யாருக்கு சொந்தம்… யார் விட்டு கொடுப்பார்கள் என்பது இனிதான் தெரியும்.

401 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன