
குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள இல்லத்தில் தனது தாயிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசி பெற்றார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் 303 இடங்களில் வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து, வருகிற 30-ஆம் தேதி இரவு 7 மணிக்கு நரேந்திர மோடி பிரதமராக மீண்டும் பதவியேற்கவுள்ளார்.

இந்த நிலையில், குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள இல்லத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது தாய் ஹீராபென்னிடம் ஆசி பெற்றார்.
தாயின் காலை தொட்டு வணங்கி ஆசி வாங்கினார்.

541 Views
