வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

கோதாவரி – கிருஷ்ணா நதிகளை இணைக்கும் திட்ட அறிவிப்பு வெளியிட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி

 

கோதாவரி – கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான் தமிழகத்திற்காக நாங்கள் செய்யும் முதல் வேலை என்று நிதின் கட்கரி கூறியதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தற்போது மீண்டும் பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற பிறகு, கோதாவரி – கிருஷ்ணா நதிகளை இணைத்து தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை சரிசெய்வதே எங்களது முதல் பணி என்று பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

கூறியதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நிதின் கட்கரிக்கு மனமார்ந்த நன்றிகள். தற்போதைய சூழ்நிலையில், கோதாவரி – கிருஷ்ணா இணைப்பு என்பது மிகவும் முக்கியமானது.

இந்த நதிகள் இணைப்பு தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை போக்கும்” என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார்.

326 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன