கோதாவரி – கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான் தமிழகத்திற்காக நாங்கள் செய்யும் முதல் வேலை என்று நிதின் கட்கரி கூறியதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தற்போது மீண்டும் பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற பிறகு, கோதாவரி – கிருஷ்ணா நதிகளை இணைத்து தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை சரிசெய்வதே எங்களது முதல் பணி என்று பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
கூறியதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நன்றி தெரிவித்துள்ளார்.
Hearty thanks @nitin_gadkari ji for the announcement to link Godavari and Krishna. This project is very crucial at the moment, as it can widely resolve the water scarcity in Tamil Nadu.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) May 26, 2019
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நிதின் கட்கரிக்கு மனமார்ந்த நன்றிகள். தற்போதைய சூழ்நிலையில், கோதாவரி – கிருஷ்ணா இணைப்பு என்பது மிகவும் முக்கியமானது.
இந்த நதிகள் இணைப்பு தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை போக்கும்” என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார்.