
அழகி போட்டியால் சிக்கலா… அழகி பட்டத்தால் சர்ச்சையா – சிக்கலில் சூர்யா பட நாயகி
வெற்றி நடிப்பில் ஹிட்டான 8 தோட்டாக்கள், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை மீராமிதுன்.
பெங்களூரைச் சேர்ந்த இவரது உண்மையான பெயர் தமிழ்ச்செல்வி.

இவர் நடிக்க வருவதற்கு முன் மாடலிங்கில் இருந்துள்ளார் அதோடு மிஸ் குயின் ஆஃப் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா ஆகிய போட்டிகளில் அழகிப்பட்டம் வென்றுள்ளார்.
தற்போது மிஸ் தமிழ்நாடு திவா எனும் பெயரில் தமிழ்ப்பெண்களுக்கென பிரத்யேகமாக அழகி போட்டி நடத்த முற்பட்டுள்ளார்.

மேலும் அந்த நிகழ்ச்சியை தான் நடத்தக் கூடாது என்பதற்காக மிரட்டல் விடுப்பதாகக் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில் அஜித் ரவி, ஜோ மைக்கேல் என்பவருடன் இணைந்து தன்னை மிரட்டுகிறார்கள் என்றும்,அதோடு தனது சமூக வலைதளங்களை முடக்கி தவறாக பதிவுகள் போடுவதாகவும், அவர்கள் மட்டுமல்லாமல் பல புதிய நம்பர்களிடம் இருந்தும் தனக்கு மிரட்டல் வருவதாகவும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக இவருக்கு வழங்கப்பட்ட அழகிப் பட்டத்தைத் தவறாகப் பயன்படுத்திப் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதானால் அழகி பட்டத்தை திரும்பப் பெறுவதாக மிஸ் சவுத் இந்தியா அமைப்பு என்ற பெயரிலான டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆனால் அந்த டிவிட்டர் கணக்கை பின் தொடர்வோர் எண்ணிக்கை 90 பேர் மட்டுமே என்பதால் அழகி போட்டிகள் நடத்துவதில் தொழில் போட்டியால் இப்படி புகார் எழும்புகிறதா என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.

மொத்தத்தில் அழகி என்றாலே சர்ச்சை அதிலும் அழகி போட்டியில் பட்டம் வென்றவர் என்றால் சிக்கலோ சிக்கல் போல…
