செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

இப்தார் நிகழ்ச்சியில் ரஜினியின் பாட்ஷா பட வசனம் பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ்..!

 

இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பாட்ஷா வசனம் பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ்..!

சமீபத்தில் நடந்த தேர்தலில் அதிமுக பாஜக அணி படுதோல்வி அடைந்தது.
துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் மட்டுமே வெற்றி பெற்றார். இதையடுத்து அதிமுக பாஜக இடையே மெல்ல விரிசல் ஏற்பட்டது.

மேலும் பாஜக அரசில் எப்படியும் மகனுக்கு மந்திரி பதவி வாங்கி விடலாம் என்ற எண்ணமும் நிறைவேறவில்லை.

இந்த சூழலில் அதிமுக கட்சி சார்பில் ரம்ஜான் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை தேர்தல் தோல்வி குறித்து குறிப்பிடும்போது, ‘நல்லவர்களை ஆண்டவர் சோதிப்பார், ஆனால் கைவிடமாட்டார். கெட்டவர்களுக்கு நிறைய கொடுப்பார், ஆனால் கைவிட்டுவிடுவார். அதுபோலத்தான் நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள்’ என்று கூறினார். இதே வசனத்தை தான் ‘பாட்ஷா’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வசனத்தை எதற்காக பேசினார் திமுகவை குறிப்பிட்டு பேசினாரா … அல்லது மகனுக்கு மத்திய மந்திரிசபையில் இடம் தராத பாஜகவை பேசினாரா என்று சமூக வலைதளங்களில் வைரல் விவாதங்கள் போய் கொண்டிருக்கிறது.

781 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன