புதன்கிழமை, மே 15
Shadow

புரட்சிக்கு முயற்சித்த ராணுவ தளபதியை வெட்டி உயிரோடு மீன்களுக்கு இரையாக்கி மரண தண்டனை கொடுத்த வட கொரிய அதிபர் கிம்…

 

இராணுவ புரட்சிக்கு முயற்சித்த தளபதியை வெட்டி உயிரோடு மீன்களுக்கு இரையாக்கி “ஜேம்ஸ் பாண்ட்” பட பாணியில் கொடூரமான மரண தண்டனை வழங்கிய வட கொரியா அதிபர் கிம்.

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார். இவர், தனக்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும், உடனடியாக அவர்களுக்கு மரண தண்டனை அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அதிலும், மீண்டும் வேறு யாரும் தனக்கு எதிராக செயல்படக்கூடாது என எச்சரிக்கும் விதமாக கொடூரமான முறையில் மரண தண்டனையை வழங்கி வருகிறார். தந்தையின் மறைவுக்கு பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கிம் ஜாங் அன், இதுவரை அரசில் உயர் பதவி வகிக்கும் 16 பேருக்கு மரண தண்டனை அளித்து இருக்கிறார்.

தனது உரையின் போது சத்தமாக கைதட்டவில்லை என்பதற்காக தனது சொந்த மாமாவையே பீரங்கிகளை தகர்க்க பயன்படுத்தும் துப்பாக்கி குண்டு மூலம் சுட்டு கொலை செய்துள்ளார்.

வடகொரியா ராணுவ தலைவர், மத்திய வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி, கியூபா மற்றும் மலேசியாவுக்கான தூதர்கள் உள்ளிட்டோருக்கும் கிம் ஜாங் அன், மரண தண்டனையை நிறைவேற்றியிருக்கிறார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உடனான 2-வது பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த ஆத்திரத்தில், அந்த பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்த அமெரிக்காவுக்கான சிறப்பு தூதர் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் 4 பேருக்கு மரண தண்டனை வழங்கியதாகவும், அவர்கள் விமான நிலையத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ராணுவ புரட்சி நடத்த முயற்சித்த குற்றச்சாட்டில், வடகொரிய ராணுவ தளபதி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் அவரது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்கிற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த ராணுவ தளபதியின் பெயர் வெளியிடப்படவில்லை. பியாங்யாங்கில் உள்ள தனது வீட்டில் கிம் ஜாங் அன் வைத்திருக்கும் பிரமாண்டமான பிரானா மீன் தொட்டியில் அந்த ராணுவ தளபதி தூக்கி வீசப்பட்டு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ராணுவ தளபதியின் கைகள் மற்றும் உடல் பகுதிகள் வெட்டப்பட்ட நிலையில், ரத்தம் சொட்ட சொட்ட அவரை பிரானா மீன்களுக்கு இரையாக்கி உள்ளார் கிம் ஜாங் அன்.

இந்த மரண தண்டனை குறித்த தகவலை இங்கிலாந்து உளவுப்படையினர் தான் வெளி உலகுக்கு சொல்லி இருக்கிறார்கள்…

அதோடு , ‘ஜேம்ஸ்பாண்டு’ படத்தின் பாணியில் அதிபர் கிம் ஜாங் இந்த மரணதண்டனையை நிறைவேற்றியதாக தெரிவித்துள்ளனர். கடந்த 1965-ம் ஆண்டில் வெளியான ‘யு ஒன்லி லிவ் டுவைஸ்’ என்ற ஜேம்ஸ்பாண்டு படத்தில் வில்லன் தனது உதவியாளரை பிரானா மீன்களுக்கு இரையாக்கி கொடூரமாக கொலை செய்வார். இப்படி கொடூரமாக கொலை செய்யும் காட்சிகள் அந்த படத்தில் உள்ளன.

இதை பார்த்து தான், கிம் ஜாங் அன், ராணுவ தளபதிக்கு இப்படி கொடூரமான முறையில் மரண தண்டனை வழங்கி இருக்கலாம் என்கிறது இங்கிலாந்து உளவுத்துறை.

ஆனால் இந்த விவகாரம் குறித்து வட கொரியாவில் மூச்சு பேச்சே இல்லையாம்… எந்த ஊடகத்திலும் செய்தி வரவில்லையாம்.

 

இது போன்ற கொடூரமான மரண தண்டனையை வழங்கிய கிம் தான் உலகின் மிக பயஙகரமான கொடூர மனம் படைத்த சைக்கோ  மனிதராக உருவெடுத்துள்ளார் என்கிறார்கள் உலக் அரசியல பார்வையாளர்கள்.

743 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன