முன்னாள் காதலர் பிரபுதேவா படம் பிளாப் ஆனதால் ஷாக் ஆன நயன்தாரா..!
இந்தியில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் கடந்த வெள்ளியன்று ரிலீஸான ‘காமோஷி’ படம் படுதோல்வி அடைந்துள்ளதால் நடிகை நயன்தாரா உள்ளிட்ட ‘கொலையுதிர்காலம்’படக்குழுவினருக்கு பெரும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.
முன்னாள் காதலர் பிரபுதேவா படம் இந்தியில் பிளாப் ஆனால் நயன்தாரா ஏன் கவலை அடைய வேண்டும்… என்று யோசிக்கிறீர்களா…
இந்தியில் பிரபுதேவா நடிச்ச காமோஷி படம் தான் தமிழில் நயன்தாரா நடிப்பில் கொலையுதிர் காலம் படமாக எடுக்கப்பட்டு உள்ளது. அதே இயக்குனர் சக்ரி தான் இரு மொழிகளிலும் இயக்கி இருக்கிறார். அப்ப பதட்டம் இருக்காதா…
ஏற்கனவே படத்தை ரிலீஸ் பண்ணக் கூடாதுன்னு கோர்ட் தடை விதித்தது. அந்த தடையை சில தினங்களுக்கு முன்பு தான் கோர்ட் நீக்கியது.
அப்பாடா சிக்கல் தீந்துடுச்சி… படத்தை ரிலீஸ் பண்ணிடலாம்னு யோசிக்கும்போது இப்படி பிளாப் நியூஸ் கிடைச்சா…
என்னதான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா படமா இருந்தாலும் பிளாப் ஆன கதை எப்படி விலை போகும்.
அதனால் படத்தை இப்போதைக்கு ரிலீஸ் பண்ணாமல் தள்ளிப் போட படக்குழு முடிவு செய்து உள்ளது.