வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

புதிதாக கட்டப்பட்ட கால்வாய் இடிந்து விழுந்ததால் அமைச்சர் நிகழ்ச்சியில் வாய்க்காலில் விழுந்த மதுரை அதிமுகவினர்!

 

 

புதிதாக கட்டப்பட்ட கால்வாய் இடிந்து விழுந்ததால் அமைச்சர் நிகழ்ச்சியில் வாய்க்காலில் விழுந்த மதுரை அதிமுகவினர்!

மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்ட நிகழ்ச்சியின் போது புதிதாக கட்டப்பட்டுள்ள கால்வாய் இடிந்து விழுந்ததில் அதிமுக கட்சியினர் வாய்க்காலில் விழுந்தனர்.

மதுரை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை நகர் முழுவதும் ஆங்காங்கே ரவுண்டானா அமைக்கப்பட்டு அங்கு மதுரையின் தொன்மையையும் வீரத்தையும் காட்டக்கூடிய சிலைகள் வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை செல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானாவில் கபடி வீரர்களின் விளையாட்டு சிலைகள் வைக்கப்பட உள்ளது .

இதன் தொடக்க விழா கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் இன்று நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் நின்று கொண்டிருந்த ரவுண்டானா திடீரென இடிந்து விழுந்தது . இதில் உடனிருந்த அதிமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளே விழுந்தனர். புதிதாக கட்டப்பட்டுள்ள ரவுண்டானா இடிந்து விழுந்ததால் அது என்ன லட்சணத்தில் கட்டப்பட்டிருக்கும் என்பது தெரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

913 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன