வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

மக்களை தனிமை படுத்திக் கொள்ள சொல்லிவிட்டு பார்லிமெண்ட் கூட்டத்தை நடத்துவது ஏன்? – மோடிக்கு சிவசேனா கேள்வி

 

 

மக்களை தனிமை படுத்திக் கொள்ள சொல்லிவிட்டு பார்லிமெண்ட் கூட்டத்தை நடத்துவது ஏன்? – மோடிக்கு சிவசேனா கேள்வி

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. மக்கள் தங்களை தனிமைப்படுத்துவதன் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்தார்.

இதற்காக வருகிற 22-ந் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் மக்களை தனிமைப்படுத்த கூறும் பிரதமர் மோடி பாராளுமன்றத்தை மட்டும் நடத்துவது ஏன்? என்று சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.

அந்தக் கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் இது தொடர்பாக கூறப்பட்டிருப்பதாவது:-
கொரோனாவை கட்டுப்படுத்த மக்களை தனிமைப்படுத்துமாறு பிரதமர் மோடி கூறியிருக்கிறார். அரசு பணிகளை குறைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் மற்றொரு புறம் அவர் பாராளுமன்றத்தை தொடர்ந்து நடத்துகிறார்.

கொரோனாவை கட்டுபடுத்த மும்பை முழுவதையும் மூடி மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஆனால் டெல்லியில் அப்படியில்லை. கொரானா பதட்டம் இருக்கும் நேரத்திலும்
பாராளுமன்ற கூட்டம் நடைபெறுவதால், எம்.பி.க்கள், அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவரும் ஒன்றாக இணைந்து இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வேண்டுமெனில் பாராளுமன்றக் கூட்டத்தையும் தள்ளி வைத்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

343 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன