வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

தமிழகத்தில் கொரானா பாதிப்பில் முதல் பலி..!

 

தமிழகத்தில் கொரானா பாதிப்பில் முதல் பலி..!

உலகம் முழுதும் பெரும் உயிர்பலிகளை ஏற்படுத்தி வரும் கொரானா வைரஸ் தாக்கம் தமிழகதிலும் மிக அதிகமாக பரவி வருகிறது.

ஏற்கனவே 18 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தனர்.

இவர்களில் மதுரையை சேர்ந்த 54 வயது நபர் சிகிச்சை பலன் அளிக்காமல் பலியானார்.

இவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

வெளிநாடு, வெளிமாநிலம் எங்கும் சென்று வராமல் சமூக பரவல் மூலமாக கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர் என்பது குறிப்பிடதக்கது.

மதுரையை சேர்ந்த அந்த நபருக்கு, சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த பிரச்சினை அதிகளவில் இருந்ததாம்.

இந்த விவரங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

கொரானா வைரஸ் தாக்கத்தால் தமிழகத்தில் பலியான முதல் நபர் இவர்.

1,342 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன