கொரானா பரப்பி விடுவது யார் ? பிரகாஷ்ராஜ் ஆவேசம்
உலகின் பெரும்பாலான நடுகளை நிலைகுலைய செய்து உயிர்பலிகளை வாங்கி வரும் கொரானா தொற்றால் சுமார் 7 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் கொரானா பரவலை தடுக்க 21நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். அதே நேரம் கொரானா தொற்றின் தீவிரம் புரியாமல் பலரும் சுற்றி வருகிறார்கள்.
கொரானா விழிப்புணர்வுக்கு ஒவ்வொரு நடிகர் நடிகையும் தங்கள் பங்களிப்பைச் செய்து வருகின்றனர். நடிகர் பிரகாஷ்ராஜ் சமூகத்தில் எந்த ஒரு பிரச்சனைக்கும் அழுத்தமாக தன் கருத்தை பதிவு செய்வார்.
கொரானா விழிப்புணர்விலும் தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். கொரானா வைரசை பரப்பியது சீனாதான் என்று அமெரிக்கா ஊடகங்கள் சில ஆதாரங்களுடன் கட்டுரை வெளியிட்டுள்ளது.
ஆனால் நடிகர் பிரகாஷ்ராஜ் டிவிட்டரில் எப்படிக் கொந்தளித்திருக்கிறார் பாருங்கள், ‘கொரானா வைரஸ் தானாகப் பரவவில்லை. பொதுமக்கள்தான் பரப்புகிறார்கள். அனைவரும் வீட்டிலேயே இருந்து உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு உதவுங்கள்.
பொறுப்போடு செயல்படுங்கள். அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தாருங்கள். குழந்தைகள் எதிர்காலம் பற்றிச் சிந்தியுங்கள். நான் எனது மகனோடு வீட்டில் நேரத்தைக் கழிக்கிறேன்’ என கொரானா தொற்றைத் தடுக்க போடப்பட்ட ஊரடங்கை மதிக்காமல் வெளியில் சுற்றித் திரியும் மக்களை வெளுத்து வாங்கி இருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
#COVID2019india #kuchkarona The VIRUS doesn’t move .. WE the PEOPLE move it .. STAY HOME.. HELP those around you .. BE RESPONSIBLE..HELP THE AUTHORITIES..a moment with my son.. 🙏THINK OF THEIR FUTURE #JustAsking pic.twitter.com/GWsstFgmxp
— Prakash Raj (@prakashraaj) March 29, 2020