
104 வயதானவர் மீண்டதால் நம்பிக்கை… கொரானா பிடியில் சிக்கினாலும் மீள முடியும்..!
உலகை அச்சுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வரும் கொரானா வைரஸ் பிடியில் இருந்து நிச்சயமாக மீள முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது சில நிகழ்வுகள்.
அமெரிக்காவின் ஓர்கான் மாகாணத்தின் லிபனோன் நகரைச் சேர்ந்த வில்லியம் லாப்சீஸ்(104) இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு கடந்த மார்ச் 10-ம் தேதி கடும் காய்ச்சல் மற்றும் மூச்சுதிணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு கொரானா தொற்று உறுதியானது.
தீவிர சிகிச்சைக்குப்பின் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதில் என்ன நம்பிக்கை என்கிறீர்களா… இவருக்கு கடந்த புதன் கிழமை 104-வது பிறந்த நாள் எனவும் வில்லியம் லாப்சீஸ், மகள் கரோலி ப்ரெளன் தெரிவித்தார்.
ஆக கொரானா தொற்று ஏற்பட்டாலும் நம்பிக்கையை தளர விடாமல் தனிமை படுத்தி முறையாக சிகிச்சை எடுத்தால் கொரானா அரக்கனை வென்று மீண்டு விடலாம் என்பதற்கு இது ஒரு சான்று.
இதே போல ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 101 வயது மூதாட்டி கொரானா வைரஸ் தாக்குதலிலிருந்து ஏற்கனவே மீண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
