தமிழ் புத்தாண்டில் மீண்டும் கொரானா உதவி அறிவிக்க லாரன்ஸ் திட்டம்!
கொரானா பரவல் காரணமாக முடங்கிப் போய் உள்ள தமிழ் திரைத்துறைக்கு கோலிவுட் பிரபலங்கள் பலரும் உதவி செய்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் லாரன்ஸ் 3 கோடி ரூபாய் நிதி உதவி அளித்தார்.
அதோடு, இன்னும் பல உதவிகள் செய்யப் போவதாகவும் அதை மாலை 5 மணிக்கு அறிவிப்பதாக கூறியிருந்தார்.
ஆனால் நேற்று மாலை 5 மணிக்கு உதவி குறித்த அறிவிப்பு எதையும் பதிவிடவில்லை. அதற்கு பதில் “அவரது ஆடிட்டர் மற்றும் நண்பர்கள் ஆலோசனைக்கு பின் முடிவெடுக்க 2 நாட்கள் கால அவகாசம் கேட்டதால் வரும் புத்தாண்டில் தனது அடுத்த கட்ட நலதிட்ட உதவிகள் குறித்து அறிவிக்கப் போவதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் இந்த கொரானா ஊரடங்கு காலத்தில் அதிக நிதி உதவி செய்த ஒரே நடிகர் லாரன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு அடுத்த கட்டமாக மீண்டும் உதவி அறிவிக்கப் போவதாக கூறியிருப்பதால் முன்னணி திரைப் பிரபலங்கள் பலருக்கு தர்மசங்கட நிலையை ஏற்படுத்தி உள்ளது.
இதுவரை அறிவித்தவர்களும் சரி எந்த உதவியையும் அறிவிக்காதவர்களும் வேறு வழியின்றி நிவாரண உதவி வழங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள்.