செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 30
Shadow

தன்னார்வலர்கள் உதவி செய்ய கூடாது என்று தடுப்பது அதிமுகவின் சர்வாதிகாரத்தனம். கருணையில்லா ஆட்சி – திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம்

 

 

தன்னார்வலர்கள் உதவி செய்ய கூடாது என்று தடுப்பது அதிமுகவின் சர்வாதிகாரத்தனம். கருணையில்லா ஆட்சி – திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம்

கொரானா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் நேரடியாக நிவாரண பொருட்கள் வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசின் அறிவுரைகளை மீறி யாரேனும் செயல்பட்டால் ஊரடங்கை மீறியதாக அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிவாரணப் பொருட்களை வழங்குவதால் தனிநபர் இடைவெளி பாதிக்கிறது என்றும் தமிழக அரசு தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில்,  தன்னர்வலர்கள், அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் பொதுமக்களுக்கு நேரடியாக உதவி அளிக்கக்கூடாது என அரசு உத்தரவிடுவது சர்வாதிகாரத்தனம் என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மு.க ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது:- “ ஊரடங்கு காலத்தில் துயருறும் எளியவர்களின் பசி நீக்க, தமிழ் மக்களின் கரங்கள் நீளும்போது, அதைத் தடுக்க உத்தரவிட எவராலும் இயலாது; தானும் செய்யாது அடுத்தவர்களையும் தடுப்பது வஞ்சகம்! இது ஜனநாயக நாடு; உதவி செய்யக் கூடாது என்பது சர்வாதிகாரத்தனம்! ‘கருணையில்லா ஆட்சி கடிந்தொழிக!’” என்று பதிவிட்டுள்ளார்.

 

இதே போல, நடிகர் லாரன்சும் அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், அரசே கடைக்கோடி வரைக்கும் உதவிகள் செய்வது சாத்தியமில்லை. இங்கே தன்னார்வலர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். அவர்களை தகுந்த விதிமுறைகளை வகுத்து பயன்படுத்த சொல்லலாம். நான் 3 கோடி கொடுத்த பிறகும் வரும் 14ம் தேதி முதல் இன்னும் நிறைய உதவிகள் செய்ய திட்டமிட்டுருந்தேன். அந்த சூழலில் அரசின் இந்த அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. எனவே தயவு செய்து இதை மறுபரிசீலனை செய்து உத்தரவு பிறப்பித்தால் நல்லது என கூறியுள்ளார் லாரன்ஸ்.

இதைப்போலவே பல தரப்பினரும் அரசின் இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

509 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன