செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

கொரானாவிலிருந்து பூரண குணமடைந்து மீண்டும் பணிகளை துவங்கினார் இங்கிலாந்து பிரதமர்!

 

கொரானாவிலிருந்து பூரண குணமடைந்து மீண்டும் பணிகளை துவங்கினார் இங்கிலாந்து பிரதமர்!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரானாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

அவர் குணனடைய வேண்டும் அதற்கான அனைத்து உதவிகளும் செய்யத்தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட பல நாடுகளின் தலைவர்கள் அறிவித்திருந்தனர்.

தீவிர சிகிச்சைக்கு பின் ஓரளவுக்கு உடல் நிலை தேறியதும் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட போரீஸ் ஜான்சன் கடந்த வாரம் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பினார்.

முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்பதால் தனது பண்ணை வீட்டில் தங்கி இருக்கும் போரீஸ் ஜான்சன் தற்போது மீண்டும் தனது பணிகளை செய்ய துவங்கி இருக்கிறார்.

மேலும், அவரை வெளியுறவுத்துறை மந்திரி டொமினிக் ராப், போரிஸ் ஜான்சனின் தலைமை ஆலோசகர் டொமினிக் கம்மிங்ஸ், தகவல் தொடர்பு இயக்குனர் லீ கெயின் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினார்.

இந்த கொரானா பாதிப்பில் உலக தலைவர்களில் முதலில் சிக்கி மீண்டவர் போரீஸ் ஜான்சன் என்பது குறிப்பிடத்தக்கது.

534 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன