ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28
Shadow

கவிஞர் கண்ணதாசன் பேரனின் முடிவுக்கு தடை போட்ட அஜீத்!

 

 

தமிழ் நடிகர்களில் தனி இடத்தில் இருப்பவர் அஜித். இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருந்தாலும் மன்றங்கள் எதுவும் வேண்டாம் என சொல்லிவிட்டார்.

ஆனாலும், அஜீத் படங்கள் ரிலீஸ் ஆகும் போதும், பட அறிவிப்பின் போதும் அவரது பிறந்த நாளின் போதும் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு பஞ்சம் இருக்காது.

இந்த சூழலில் மே 1ம் தேதி நடிகர் அஜித்தின் பிறந்தநாள். இந்த கொரானா இடர் நேரத்திலும் அஜீத் பிறந்த நாளை கொண்டாட ரசிகர்கள் தயாரானார்கள்.

கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அஜித் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறும் பொது டிபி ஒன்றை திரைப்பிரபலங்கள் மூலம் வெளியிட முடிவு செய்திருந்தார்கள்.

அந்த பொது டிபியை வெளியிட இருந்த பிரபலங்களில் நடிகர் ஆதவ் கண்ணதாசனும் ஒருவர். ஏற்கனவே இது தொடர்பாக தனது டிவிட்டர் பதிவில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.


இந்நிலையில் அஜீத் பிறந்த நாளுக்கு வெளியிடுவதாக இருந்த பொது டிபி பிளான் கேன்சல் என்று கூறியிருக்கிறார் ஆதவ்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: அஜித்தின் அலுவலகத்தில் இருந்து எனக்கு போனில் அழைப்பு வந்தது. கொரானா நேரத்தில் அவரின் பிறந்தநாளுக்காக பொது டிபி வெளியிட்டு கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள். இது அவருடைய தனிப்பட்ட கோரிக்கை. ஒரு ரசிகனாக, சக நடிகனாக, மனிதனாக அவரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்க விரும்புகிறேன். இந்த கோரிக்கையை நான் டுவிட் செய்து விளக்கட்டுமா என்று கேட்டதற்கு அவர்கள் சரி என்றார்கள். இந்த நேரத்தில் அனைவரும் நலமாக வாழ வாழ்த்துவோம். தல அஜித்தின் வார்த்தைக்கு மதிப்பு கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு அஜீத் ரசிகர்களுக்கு ஒரு பக்கம் ஏமாற்றத்தை கொடுத்திருந்தாலும் இன்னொரு பக்கம் இதுபோன்ற சூழலில் கொண்டாட்டத்தை தவிர்க்கும் அஜீத்தின் மனித நேயம் இன்னும் ஏராளமான ரசிகர்களை அவருக்கு பெற்று தரும் என்று சந்தோஷப்படுகிறார்கள்.

1,279 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன