
சூர்யா தயாரித்த ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை டிஜிட்டலில் வெளியிட செய்த முடிவுக்கு தியேட்டர்கள் அதிபர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதோடு அடுத்ததாக வரும் சூர்யா, கார்த்தி,ஜோதிகா படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்ய மாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இப்படி தியேட்டர் அதிபர்களின் எதிர்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் ஏராளமான தயாரிப்பாளர்கள் சூர்யாவின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளதால் திரையுலகில் பரபரப்பு ஏற்படுகிறது.
இப்போது இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு சமரசம் செய்து வைக்க முடிவெடுத்து உள்ளதாக தெரிகிறது.
இந்த பிரச்சினை தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது “இது திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கான பிரச்னை. இது தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினை தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளேன்.
இரு தரப்பினரும் அமர்ந்து பேச வேண்டிய பிரச்னை என்பதால் இரு தரப்பும் பேசி தீர்க்க அரசு உதவி செய்யும் என தெரிவித்துள்ளார்.
