வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

மக்கள் ஒத்துழைப்பு முழுமையாக இல்லாவிட்டால் கொரானா பரவலை தடுப்பது சிரமம் என்கிறார் முதல்வஎ எடப்பாடிபழனிச்சாமி.

 

 

 

மக்கள் ஒத்துழைப்பு முழுமையாக இல்லாவிட்டால் கொரானா பரவலை தடுப்பது சிரமம் என்கிறார் முதல்வஎ எடப்பாடிபழனிச்சாமி.

கொரானா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.

அப்போது முதலமைச்சர் கூறியதாவது:-

* வெளியில் செல்லும் அவசியம் ஏற்பட்டால் முகக்கவசம் அணிய வேண்டும்

* தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்

* மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை என்றால் கொரானா நோய் தொற்று பரவலை தடுப்பது சாத்தியம் ஆகாது

* மக்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் காக்க அனைவரும் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்

* கொரானா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் தமிழகத்தில்தான் அதிகம்

* கொரானாவால் உயிரிழப்போரின் சதவிகிதம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே தமிழகத்தில் தான் மிகக்குறைவு

* நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் தான் அதிக சோதனை மையங்கள் உள்ளன

* நாள் ஒன்றுக்கு சராசரியாக 13 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

289 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன