உ
மக்கள் ஒத்துழைப்பு முழுமையாக இல்லாவிட்டால் கொரானா பரவலை தடுப்பது சிரமம் என்கிறார் முதல்வஎ எடப்பாடிபழனிச்சாமி.
கொரானா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
அப்போது முதலமைச்சர் கூறியதாவது:-
* வெளியில் செல்லும் அவசியம் ஏற்பட்டால் முகக்கவசம் அணிய வேண்டும்
* தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்
* மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை என்றால் கொரானா நோய் தொற்று பரவலை தடுப்பது சாத்தியம் ஆகாது
* மக்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் காக்க அனைவரும் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்
* கொரானா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் தமிழகத்தில்தான் அதிகம்
* கொரானாவால் உயிரிழப்போரின் சதவிகிதம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே தமிழகத்தில் தான் மிகக்குறைவு
* நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் தான் அதிக சோதனை மையங்கள் உள்ளன
* நாள் ஒன்றுக்கு சராசரியாக 13 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.