புதன்கிழமை, மே 15
Shadow

மீண்டும் குஷ்பு வாய்க் கொழுப்பு பேச்சு!

 

 

மீண்டும் குஷ்பு வாய்க் கொழுப்பு பேச்சு!

தமிழ் பெண்களுக்கு கற்பு என்பதே இல்லை என்பதை போன்ற அபத்தமான கருத்தை சொல்லி தமிழகத்தில் பல மாவட்டங்களில் சுமார் 29 வழக்குகளுக்கு மேல் சிக்கியவர் குஷ்பு.

இந்த வழக்குகளுக்கு பயந்து திமுகவில் ஐக்கியமானார். அங்கேயும் ரொம்ப நாள் நீடிக்காமல் காங்கிரஸ் கட்சிக்கு தாவினார்.

தான் ஒரு பிரபலமான நடிகை தான் பேசும் பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் என்று தெரிந்தே கொஞ்சம்… இல்லை இல்லை நிறையவே ஆணவத்தோடு பல கருத்துக்களை சொல்லி சர்ச்சையில் சிக்குவது குஷ்பு வழக்கம்.

அடிக்கடி பத்திரிகையாளகளிடம் சிக்கிக் கொள்வார். இப்போது கொரானா காலம். திரையுலகம் முழுதும் முடங்கி இருந்தது.

பல முறை நடையாக நடந்து டிவி சீரியல் ஷூட்டிங் நடத்த அனுமதி வாங்கினார்கள். அதிலும் பல கட்டுப்பாடுகளுடன் அந்த அனுமதி தரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டிவி சீரியல் ஷூட்டிங் நடத்துபவர்களுக்கு குஷ்பு ஒரு ஆடியோ அனுப்பி உள்ளார். அதில் தேவை இல்லாமல் பத்திரிகையாளர்களை ஒருமையில் விமர்சித்து பேசியுள்ளார்.
இந்த ஆடியோ வெளியான நிலையில் அனைத்து ஊடகத்துறையினரின் ஒட்டுமொத்த கோபத்திற்கும் ஆளாகியுள்ளார் குஷ்பு.

ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காதுன்னு சும்மாவா சொன்னாங்க அது மாதிரி வாய் கொழுப்பா பேசினா அது குஷ்புவாதான் இருக்கும்னு இனி சொல்லலாம்!

826 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன