சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

சாத்தான்குளம் அப்பா,மகன் மரண வழக்கு CBI வசம் ஒப்படைக்கப்படும் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சாத்தான்குளம் அப்பா,மகன் மரண வழக்கு CBI வசம் ஒப்படைக்கப்படும் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

கடந்த சில தினங்களாக நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சாத்தான்குளம் அப்பா, மகன் மரண வழக்கு இப்போது விசாரணையில் உள்ளது.

மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்த வழக்கை தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது.

அப்பா, மகனை அடித்து கொன்றதாக சாத்தான்குளம் போலீசார் அனைவரும் கூண்டாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

பொது மக்கள் மத்தியிலும் இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வழக்கின் உண்மையான நிலையை கண்டறிந்து குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்று தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது.

இப்போது இந்த வழக்கின் விசாரணையை கோர்ட் அனுமதியுடன் CBI வசம் ஒப்படைக்க முடிவு செய்து உள்ளதாக முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி கூறியுள்ளார்.

207 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன