
சாத்தான்குளம் படுகொலை சம்பவம் முறையாக விசாரிக்கப்பட வேண்டும் – ஐ.நா.விருப்பம்
சாத்தான்குளம் தந்தை மகன் கொடூர கொலை வழக்கு தமிழகம் தாண்டி இந்தியா தாண்டி சர்வதேச அளவில் சிறப்பு கவனம் பெற்றுள்ளது.
ஏற்கனவே இந்த வழக்கு விசாரணை குறித்து தனிகவனம் செலுத்த வேண்டும் என ஐநா மன்றம் பிரதமர் மோடிக்கும், முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி, கவர்னர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியது.
நியூயார்க்கில் ஐநா தலைமை அலுவகலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொதுச்செயலாளர் ஆண்டனியோ கட்டர்சின் செய்தி தொடர்பாளர், ஸ்டீபன் துஜாரிக்கிடம் சாத்தான்குளம் சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இக்கேள்விக்கு பதிலளித்த ஸ்டீபன் துஜாரிக், “சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் ஆகியோர் மரணம் தொடர்பாக முறையான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். இது போன்ற மரணங்கள் தொடர்பாக கொள்கைப்படி முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றே ஐ.நா. பொதுச்செயலாளர் விரும்புகிறார்”
