ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28
Shadow

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி இறுதி கட்டத்தை எட்டியது!

 

 

கொரானா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. கொரானா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர உலகம் முழுவதும் சுமார் 100-க்கு மேற்பட்ட தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அனைத்தும் தற்போது வரை சோதனையிலேயே இருந்து வருகிறது.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி இறுதி கட்டத்தை எட்டியதாக கூறப்படுகிறது. ஆக்ஸ்போர்டு 3-வது கட்ட பரிசோதனையாக மனித உடலில் தடுப்பூசியை செலுத்தியுள்ளது. இதன் முடிவு வெற்றிகரமாக அமைந்து விட்டால், இங்கிலாந்துதான் முதல் தடுப்பூசியை கண்டுபிடித்த நாடு என்ற பெருமையைப் பெறும்.
2-ம் கட்ட பரிசோதனையின் முடிவை அடுத்த வாரத்தில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது
263 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன