செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 16
Shadow

உலக அளவில் ஒரு நாளில் வைரஸ் பாதிப்பில் அதிக மரணங்களை சந்தித்த மோசமான நாடுகளில் முதலிடத்தில் இந்தியா!

 

 

உலகிலேயே நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அதிகம் பேர் உயிரிழந்த நாடுகளில் மோசமான முதல் இடத்தை இந்தியா அடைந்துள்ளது.

பல்வேறு நாடுகளில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2 லட்சத்து 11,000 பேர் வைரஸ் தொற்றால் புதிதாக தாக்கப்பட்டனர். இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 66 லட்சத்தை கடந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தவர்கள் விகிதாச்சாரப்படி 636 பேர் பேருடன் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது, 627 பேருடன் பிரேசில் இரண்டாமிடத்தையும், 570 பேருடன் அமெரிக்கா மூன்றாம் இடத்திலும் உள்ளன.

நேற்று ஒரே நாளில் மூவாயிரத்து தொள்ளாயிரத்துக்கும் அதிகமானோர் பலியானதால் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 55 ஆயிரமாக அதிகரித்துள்ளது. ஒரு கோடியே 2 லட்சம் பேர் சிகிச்சை முடிந்து சென்றிருந்தாலும். இன்னும் 50 லட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

600 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன