சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 24 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்!
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்ததில் இருந்து, அரசு நிர்வாகத்தில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்றும் 24 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 54 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டு இருக்கின்றனர்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்ட இயக்குனர் கவிதா ராமு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார்.
தமிழ்நாடு குடிசைகள் மாற்று வாரிய இணை மேலாண்மை இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனர் எஸ்.கோபால சுந்தரராஜ் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தஞ்சை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.
வேளாண்மை சந்தையியல் மற்றும் வேளாண் தொழில்கள் இயக்குனர் கே.வி.முரளிதரன் தேனி மாவட்ட கலெக்டர் ஆனார்.
தமிழ்நாடு சாலை பிரிவு திட்டங்கள் இயக்குனர் ஏ.அருண் தம்புராஜ் நாகை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.
மதுரை மாநகராட்சி கமிஷனர் எஸ்.விசாகன் திண்டுக்கல் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.
தென்காசி மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் கோவை மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார்.
தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக (டான்–ஜெட்கோ) இணை மேலாண்மை இயக்குனர் எஸ்.வினீத் திருப்பூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.
இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் பி.ரமண சரஸ்வதி அரியலூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரிய செயல் இயக்குனர் பி.பிரபுசங்கர் கரூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (பணிகள்) ஜே.மேகநாத ரெட்டி விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஆனார்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழக செயல் இயக்குனர் ஜி.யு.சந்திரகலா தென்காசி மாவட்ட கலெக்டர் ஆனார்.
தேனி மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணன் உன்னி ஈரோடு மாவட்ட கலெக்டர் ஆனார்.
வணிக வரிகள் (மாநில வரிகள்) இணை கமிஷனர் பி.காயத்ரி கிருஷ்ணன் திருவாரூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.