செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

ஓமிக்ரான் பரவலை அடுத்து சீனாவை உலுக்கும் அடுத்த தொற்று!

 

சீனாவில் புதிதாக பரவும்  பறவைக் காய்ச்சல்

சீனாவில் முக்கிய சில நகரங்கள் கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பறவைக் காய்ச்சல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் புதிதாக பரவும் பறவைக் காய்ச்சலுக்கு ஐவர் பாதிக்கப்பட்டுள்ளதில் இருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

சிச்சுவான் மாகாணம், ஜெஜியாங் மாகாணம் மற்றும் குவாங்சி தன்னாட்சிப் பகுதி ஆகியவையில் பறவைக் காய்ச்சல் கடந்த ஆண்டு டிசம்பரில் அடையாளம் காணப்பட்டன. இதில் இருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள நிலையில் எஞ்சிய மூவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மனிதர்களிடம் இருந்து இந்த நோய் பரவவில்லை என உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டாலும், தீவிர நடவடிக்கை தேவை என்றே தெரிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய கோழி உற்பத்தி மற்றும் வாத்து உற்பத்தியில் சீனா முதலிடத்தில் உள்ளது

429 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன