வியாழக்கிழமை, மே 16
Shadow

நள்ளிரவில் பெரியார் சிலையை இடித்து தள்ளிய லாரி… விழுப்புரத்தில் பரபரப்பு!

 

 

விழுப்புரம் காமராஜார் சாலையில் இருந்த தந்தை பெரியார் சிலை மீது கனரக லாரி மோதியதில் சிலை முழுவதுமாக சேதமடைந்தது.

மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் நகரின் முக்கிய சாலைகளில் ஒன்று காமராஜார் சாலை. இந்த சாலையில் தலைமை தபால்நிலையம் எதிரே கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியாரின் சிலை நிறுவப்பட்டது.

இந்நிலையில், நேற்று இரவு புதுச்சேரி மாநிலம் நெட்டபாக்கம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து டையர்களை ஏற்றிக்கொண்டு மகாராஷ்ட்ர மாநிலம் புனே நோக்கி சென்ற கனரக லாரி வழி மாறி காமராஜர் சாலைக்கு சென்றுள்ளது வழி தவறி வந்ததை உனர்ந்த ஓட்டுனர் லாரியை திருப்ப முயன்றுள்ளார், குறுகிய சாலை என்பதாலும் நீண்ட கனரக லாரி என்பதால் லாரியை திருப்பும் போது அங்கிருந்த பெரியார் சிலை மீது மோதியது இதில் தந்தை பெரியாரின் முழு உருவ சிலை உடைந்து கீழே விழுந்தது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் லாரியை காவல்நிலையம் எடுத்து சென்றனர். மேலும், லாரி ஓட்டுனர் மச்சேந்திர ஷ்பலி என்பவரை கைது செய்துள்ளனர்.

பெரியார் சிலை சேதமடைந்ததை அறிந்த திமுகவினர், சிலையை இடித்தவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்

166 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன