விழுப்புரம் காமராஜார் சாலையில் இருந்த தந்தை பெரியார் சிலை மீது கனரக லாரி மோதியதில் சிலை முழுவதுமாக சேதமடைந்தது.
மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் நகரின் முக்கிய சாலைகளில் ஒன்று காமராஜார் சாலை. இந்த சாலையில் தலைமை தபால்நிலையம் எதிரே கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியாரின் சிலை நிறுவப்பட்டது.
இந்நிலையில், நேற்று இரவு புதுச்சேரி மாநிலம் நெட்டபாக்கம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து டையர்களை ஏற்றிக்கொண்டு மகாராஷ்ட்ர மாநிலம் புனே நோக்கி சென்ற கனரக லாரி வழி மாறி காமராஜர் சாலைக்கு சென்றுள்ளது வழி தவறி வந்ததை உனர்ந்த ஓட்டுனர் லாரியை திருப்ப முயன்றுள்ளார், குறுகிய சாலை என்பதாலும் நீண்ட கனரக லாரி என்பதால் லாரியை திருப்பும் போது அங்கிருந்த பெரியார் சிலை மீது மோதியது இதில் தந்தை ப...
தமிழகம் முழுவதும் இன்று சமூக நீதிநாள் கடைபிடிப்பு- மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!
பெரியார் பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 17-ந் தேதி) சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் தலைமை செயலகம் தொடங்கி அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று கூறி இருந்தார். அரசு அலுவலகங்களில் இதை செயல்படுத்தும் விதமாக அரசாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதையொட்டி இன்று சென்னை தலைமை செயலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைமைச் செயலகத்தில் உள்ள திறந்த வெளி மைதானத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சமூக நீதி நாள் உறுதிமொழியை மு.க.ஸ்டாலின் வாசிக்க அதை அங்கிருந்த அனை...
திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் இழிவுபடுத்தி அவமதித்துள்ளனர். நள்ளிரவில் பெரியார் சிலை மீது காவி சாயத்தை ஊற்றியும், செருப்பு வீசியும் மர்மநபர்கள் அவமதிப்பு செய்துள்ளனர்.
இந்நிலையில் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதற்கு முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது,
பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதால் மக்களிடமிருந்து பறக்கணிக்கப்படுவோம் என்பதை உணர்வார்களா?. பெரியார் ஒரு இயக்கத்தின் தலைவர் அல்ல, தமிழ் இயக்கத்தின் தலைவர். பெரியாரை அவமதிப்பதாக நினைத்து செய்பவர்கள் தங்களை தாங்களே அவமரியாதை செய்துகொள்கிறார்கள் என பதிவிட்டுள்ளார்....