ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28
Shadow

அதிமுக ஆட்சியில் நடைபெற்ற தவறுகள் கண்டறியப்படும்: பூச்சி முருகன் உறுதி!

 

 

வீட்டு வசதி வாரியத் தலைவராக பூச்சி.எஸ்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ். முருகன் பொறுப் பேற்றுக் கொண்டார்.

திமுக தலைமை நிலையச் செயலராக பதவி வகித்து வரும் பூச்சி. எஸ். முருகனை வீட்டு வசதி வாரிய தலைவராக நியமித்து

கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்நிலையில் நேற்று கோயம்பேடு சிஎம்டிஏ அலுவலகத்தில் பூச்சி எஸ் . முருகன் வீட்டு வசதி வாரிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பூச்சி எஸ் முருகன்,

“வீட்டு வசதி வாரிய தலைவராக நியமித்ததற்கு முதல்வருக்கும் வீட்டு வசதி வாரிய அமைச்சர் முத்துசாமிக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.  கடந்த ஆறு மாதங்களாக கடந்த ஆட்சியில் நடந்த தவறுகளை சரி செய்யும் பணியை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகி்ன்றனர். அவர்களுடன் துணை நின்று என் பணிகளை மேற்கொள்ளுவேன்” என்று கூறினார்.

420 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன