
லண்டனில் இருந்து 2012 ஆம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் கோல்ட் காரை நடிகர் விஜய் வாங்கினார்.
இதற்கு இறக்குமதி வரியாக கிட்டத்தட்ட 2 கோடியை செலுத்தினார்.
இருப்பினும் அந்த காரை வட்டார போக்குவரத்து அதிகாரியின் அலுவலகத்தில் பதிவுசெய்யும் போது வணிக வரித்துறையில் நுழைவு வரியை செலுத்தி சான்று வாங்கிவருமாறு சொல்லப்பட்டது.
இந்த வரியை செலுத்தவேண்டிய அவசியமில்லை என கேரள மற்றும் சென்னை உயர்நீதி மன்ற வழக்குகள் சிலவற்றில் குறிப்பிட்டுள்ளதாக கூறி இந்த வரியை செலுத்த மறுத்தார் விஜய்.
இருப்பினும் நுழைவு வரியை கட்டாயம் செலுத்தவேண்டும் என வணிக துறை உத்தரவிட்டதால் அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார் விஜய்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது 20 % வரியை செலுத்திவிட்டு வாகனத்தை பதிவுசெய்யுமாறு உத்தரவிடப்பட்டது.
2012 ஆம் ஆண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அதே ஆண்டில் வரியை செலுத்தி விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காரை பயன்படுத்திவந்தார்.
மேலும் அந்த தீர்ப்பை அளித்தபோது சுப்பிரமணியம் புகழ்பெற்ற சினிமா நடிகர்கள் சரியான நேரத்தில் வரி செலுத்த வேண்டும்.
வரி செலுத்துவது என்பது கட்டாய பணியே தவிர நாட்டிற்காக அளிக்கும் நன்கொடை கிடையாது.
கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட திரை நட்சத்திரகள் திரையில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக திகழ வேண்டும் என்றார்.
இக்கருத்து மக்களிடமும், ரசிகர்களிடமும் பெரும் பேசும்பொருளாக உருவெடுத்தது.
மேலும் விஜய் ரசிகர்கள் இக்கருத்துக்கு கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் நடிகர் விஜய்யும் இக்கருத்தை திரும்ப பெறவேண்டும் என்று அவர் தரப்பில் இருந்து கூறப்பட்டது.
இந்த தீர்ப்பையும், கருத்தையும் எதிர்த்து விஜய் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தார்.
இந்த மனு கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு வந்தபோது விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராத தொகைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
மேலும் விஜய் தான் வாங்கிய காருக்கான வரியை முழுவதும் செலுத்திவிட்டார்.
இந்நிலையில் தற்போது இந்த மேல்முறையிட்டு மனுவின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
