
19 வயது உலக கிரிக்கெட் கோப்பையில் இந்தியா சாம்பியன்!
இறுதிப்போட்டியில் இங்கிலாந்து எதிரான 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது இந்திய U19 அணி.
5வது முறையாக கோப்பையை வென்றுள்ளது
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், ரூ.40 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இது சிறிய டோக்கன் முறையிலான பாராட்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஜூனியன் அணி ஐந்தாவது முறை சாம்பியன் பட்டம் வென்றவுடன் பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா, வீரர்கள் மற்றும் துணைப்பணியாளர்களுக்கு ரொக்க வெகுமதிகளை அறிவித்தார்.
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், முன்மாதிரியான செயல் திறனுக்காக ஒரு வீரருக்கு ரூ.40 லட்சமும், துணை ஊழியர்களுக்கு ரூ.25 லட்சமும் வெகுமதி அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள்இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
368 Views
