“குருமூர்த்தி” படத்தில் கவர்ச்சி இருக்கு… கதை இருக்கா? – கோடங்கி பார்வை 2/5
கோடங்கி 2/5
பெரிய தொழிலதிபரான ராம்கி ஒரு வீடு வாங்குவதற்காக 5 கோடி ரூபாய் எடுத்துச் செல்கிறார். அவசரமாக ஒரு மாத்திரை சாப்பிட வேண்டும் என்று ஒரு பெட்டிக் கடையில் நிறுத்தித் தண்ணீர் கேட்கிறார்.அங்கே சிறு சலசலப்பு வருகிறது.அந்தச் சலசலப்பின் முடிவில் திரும்பிப் பார்த்தால் காரில் உள்ள பணப்பெட்டி காணாமல் போய்விடுகிறது.
அதை ஒரு திருடன் எடுத்து செல்கிறான். போலீஸ் வருவதை பார்ஹ்த்தும் தேயிலைச்செடிகளுக்குள் மறைத்து வைக்கிறார்.
அங்கிருந்து அந்த பெட்டியை இன்னொருவர் எடுத்து கொள்கிறார்… அவரிடமிஉந்து அந்த பணப்பெட்டி மாறி மாறி போய்க் கொண்டே இருக்கிறது. பணத்தை தொலைத்த ராம்கி , போலீசில் புகார் செய்கிறார்.
இன்ஸ்பெக்டர் நட்டி பணப்பெட்டி யாரிடம் இருக்கிறது? கடைசியில் யாரிடம் போய்ச் சேருகிறது? என்பதை தேடி கண்டு பிடிக்கிறாரா இல்லையா என்பதுதான் குருமூர்த்தி.
ரொம்ப ஸ்டிரிக்ட் இன்ஸ்பெக்டராக நட்டி. பிரசவ வலியில் மனைவி ஆஸ்பத்திரியில் இருந்தாலும் கடமை முக்கியம் என திருடர்களை தேடி ஓடி போலீசை கவுரவப்படுத்தினாலும் நட்டி இன்னும் பயிற்சி எடுக்க வேண்டும்.
நட்டி மனைவியாக பூனம் பாஜ்வா, பாடல் காட்சிகளில் படு தாராளம், காதல் காட்சிகளில் அதிக நெருக்கம் காட்டி இளைஞர்களை ஈர்க்கிறார். மருத்துவமனையில் பிரசவ வலியில் துடிக்கும் காட்சிகள் நிஜமோ என என்னத்தோன்றுகிறது.
ராம்கிக்குப் பெரிசா எந்த வேலையும் இல்லை. கார் ஓட்டுகிறார்… நடக்கிறார்… ஓடுகிறார் கடைசியில் கருத்து சொல்கிறார்.
போலீசாக வரும் ரவிமரியா, மனோபாலா சிரிப்புக்கு அவ்வப்போது கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள். அதே போல மொட்டை ராஜேந்திரன்,ஜார்ஜ் தங்கள் பங்குக்கு சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் பாவம் சிரிப்பு வர மாடேன்னு அடம் பிடிக்கிறது.
கவர்ச்சி காட்ட சஞ்சனா சிங், அஸ்மிதா தாரளம் காட்டுகிறார்கள். தேவராஜ் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சி.
சத்யதேவ் உதயசங்கர் இசையில் பாடல்கள் பின்னணி இசை சுமார் ரகம்.
இயக்குநர் கே.பி.தனசேகரன் இன்னும் திரைக்கதையிலும், மேக்கிக்கிலும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் குருமூர்த்தி பேசப்பட்டிருப்பான்.
கோடங்கி 2/5