செவ்வாய்க்கிழமை, மே 13
Shadow

நடிகை அளித்த பாலியல் புகார் வழக்கு விசாரணைக்கு ஆஜரானார் சீமான்!

 

விசாரணைக்கு ஆஜரானார் சீமான்!

நடிகை அளித்த பாலியல் புகார் வழக்கு விசாரணைக்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஆஜரானார்.

வழக்கு தொடர்பாக காவல் துறை 2 முறை சம்மன் அனுப்பிய நிலையில் தற்போது சீமான் ஆஜராகி உள்ளார். காவல் நிலையம் வரை சீமானின் காரை அனுமதிக்க வேண்டும் என காவல் துறையுடன் தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சீமானின் காரை மட்டும் அனுமதித்த காவல்துறை, மற்ற கார்களை தடுத்து நிறுத்தினர்.

இருப்பினும், வளசரவாக்கம் காவல் நிலையம் அருகே கூடியுள்ள நாதகவினர் தடுப்புகளை தாண்டி உள்ளே செல்ல முயன்றனர். இதனால் நாதகவினர்-காவல்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விசாரணைக்கு ஆஜராகியுள்ள சீமானிடம் 50க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் பெற காவல் துறை திட்டமிட்டுள்ளது.

சீமான் ஆஜராவதையொட்டி வளசரவாக்கம் காவல் நிலையத்தை சுற்றி தடுப்புகள் அமைத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாதகவினர் போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்து அழைத்துச் செல்ல பேருந்துகளும் வரவழைக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு வாகனங்கள், 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்டவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் வளசரவாக்கம் காவல் நிலையம் உள்ள ஸ்ரீதேவி குப்பம் சாலையில் போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையை நிறைவடைந்த பின் கைது நடவடிக்கைகளும் எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வளசரவாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

வழக்கின் பின்னணி

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி 2011-ஆம் ஆண்டு காவல் துறையில் புகாா் அளித்திருந்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் 376- ஆவது பிரிவின்படி வழக்குப் பதிவு செய்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடா்பாக விசாரணை செய்து 12 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வளசரவாக்கம் போலீஸாருக்கு கடந்த 21-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் விளைவாக சீமானை விசாரணைக்கு ஆஜராகும்படி கடந்த 24-ஆம் தேதி வளசரவாக்கம் போலீஸாா் அழைப்பாணை அனுப்பினா்.

இதுகுறித்த தகவலறிந்த வளசரவாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கோபி, நீலாங்கரை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் நீலாங்கரை காவல் ஆய்வாளா் பிரவீண் ராஜேஷ், காவலா் செளந்தரராஜன் உள்ளிட்டோா் விசாரணை செய்ய நீலாங்கரை சந்தீப் சாலை பகுதியில் உள்ள சீமான் வீட்டுக்குச் சென்றனா்.

103 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன