வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

Tag: கமல்

கோர்ட்டு தீர்ப்புக்காக காத்திருக்கும் கமல்ஹாசன்!

கோர்ட்டு தீர்ப்புக்காக காத்திருக்கும் கமல்ஹாசன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கோர்ட்டு தீர்ப்புக்காக காத்திருக்கும் கமல்ஹாசன்! கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம் பாதியில் நிற்கும் நிலையில் இயக்குனர் ஷங்கர் தெலுங்கிலும், இந்தியிலும் படங்கள் இயக்க தயாராகி உள்ளார். இந்தியன் 2 படத்தை முடிக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்கும்படி தயாரிப்பு நிறுவனம் கோர்ட்டுக்கு சென்றுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடிக்கவும் கமல்ஹாசன் ஒப்பந்தமாகி உள்ளார். ஊரடங்கு முடிந்ததும் இதன் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர். ஆனால் இந்தியன் 2 வழக்கு இதற்கு தடையாக உள்ளது. இந்தியன் 2 படத்தை முடித்து விட்டுத்தான் ஷங்கர் வேறு படங்களை இயக்க வேண்டும் என்று தீர்ப்பு வந்தால் விக்ரம் படப்பிடிப்பு தள்ளிப்போகும் என்று தெரிகிறது. அதே நேரம் ஷங்கருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் இந்தியன் 2 படத்தை தள்ளி வைத்துவிட்டு விக்ரம் படத்தில் கமல் நடிப்பார் என்று கூறப்படுகிறது. ஏற்க...
‘விக்ரம்’ படத்தில் விஜய்சேதுபதி, பஹத் பாசிலுக்கு என்னென்ன கதாபாத்திரம்!

‘விக்ரம்’ படத்தில் விஜய்சேதுபதி, பஹத் பாசிலுக்கு என்னென்ன கதாபாத்திரம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘விக்ரம்’ படத்தில் விஜய்சேதுபதி, பஹத் பாசிலுக்கு என்னென்ன கதாபாத்திரம்! நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதேபோல் நடிகர் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா பரவல் குறைந்த பின் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இப்படத்தில் நடிகர் கமல் போலீஸ் வேடத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது பஹத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் பஹத் பாசில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாகவும், நடிகர் விஜய் சேதுபதி தாதாவாக நடிக்க உள்ளதாகவும...
கமல் படத்தில் இருந்து விலகியது ஏன்? லாரன்ஸ் விளக்கம்!

கமல் படத்தில் இருந்து விலகியது ஏன்? லாரன்ஸ் விளக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கமல் படத்தில் இருந்து விலகியது ஏன்? லாரன்ஸ் விளக்கம்! நடிகர் கமலின் 232 வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசையமைக்க இருக்கும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முதலில் இந்த கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருந்தது. சில காரணங்களால் விக்ரம் படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவில்லை. அதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. ராகவா லாரன்ஸ் தற்போது ருத்ரன் படத்தில் பிசியாக நடிப்பதாலும், அதன்பின் சந்திரமுகி 2 படத்தின் வேலைகள் இருப்பதாலும் கமலின் விக்ரம் படத்தில் நடிக்க முடியாமல் போன காரணம் என்று லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்....
‘இந்தியன் 2’ விவகாரம் – லைகா நிறுவனம் இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு!

‘இந்தியன் 2’ விவகாரம் – லைகா நிறுவனம் இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு!

HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
‘இந்தியன் 2’ விவகாரம் - லைகா நிறுவனம் இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு! கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விபத்து ஏற்பட்ட போது நிறுத்தப்பட்ட, இப்படத்தின் படப்பிடிப்பு அதன்பின் தொடங்கப்படவில்லை. இதனிடையே, தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் புதிய படத்தை இயக்க ஷங்கர் தயாராகி வருகிறார். அடுத்து பாலிவுட்டிலும் ஒரு படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், தங்களது ‘இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் வேறு எந்த ஒரு படத்தையும் ஷங்கர் இயக்கக் கூடாது என உத்தரவிடக்கோரி, நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. லைகா நிறுவனம் அளித்துள்ள புகாரில், “இந்தியன் 2 படத்திற்காக போடப்பட்ட 236 கோடி ரூபாய் பட்ஜெட்டில், இதுவரை 180 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுவிட்டது...
ரஜினியின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது – கமல்ஹாசன்

ரஜினியின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது – கமல்ஹாசன்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ரஜினியின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வருவது உறுதி என கூறிய நடிகர் ரஜினிகாந்த், இன்று உடல்நிலையை கருத்தில் கொண்டு, தான் அரசியலுக்கு வரமுடியவில்லை என பகிரங்கமாக அறிவித்தார். இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், ‘ ரஜினியின் முடிவு சற்று ஏமாற்றம் இருந்தாலும்; அவரது ஆரோக்கியம் எனக்கு முக்கியம். சென்னை வந்தவுடன் அவரை சந்திப்பேன். அவரது ரசிகர்கள் மனநிலைதான் எனக்கும். அவரது ஆரோக்யம் எனக்கே முக்கியம். என் ரஜினி நலமுடன் இருக்க வேண்டும். எங்கிருந்தாலும் அவர் ஆரோக்யத்துடன் இருக்க வேண்டும்’ என்று கூறினார்....
பொள்ளாச்சி சம்பவம் நடந்து 600 நாட்கள் கடந்தும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கவில்லை – கமல்

பொள்ளாச்சி சம்பவம் நடந்து 600 நாட்கள் கடந்தும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கவில்லை – கமல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
பொள்ளாச்சி சம்பவம் நடந்து 600 நாட்கள் கடந்தும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று கமல்ஹாசன் கூறியிருக்கிறார். மநீம தலைவர் கமல்ஹாசன் வேளாங்கண்ணியில் இன்று 3ம் நாள் பிரசாரத்தை துவக்கினார். காலை 9.30 மணிக்கு தனியார் ஓட்டலில் பெண்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: நாங்கள் பழிவாங்கும் அரசியல்வாதி அல்ல. பழிபோடும் அரசியல்வாதி அல்ல. வழிகாட்டும் அரசியல்வாதி. மக்கள் நீதி மய்யம் மக்கள் மையமாக இருக்கும். இங்கு வந்துள்ள மகளிருக்கு பாதுகாப்பாக இருப்போம். பிற அரசியல்வாதிகள் காசு கொடுத்து கூட்டத்தை கூட்டி வருகிறார்கள். ஆனால் நாங்கள் அவ்வாறு வர சொல்லவில்லை. இது தானாக வந்துள்ளது. இது கூட்டம் அல்ல, குடும்பம். ஓட்டு சேர்க்க உங்களிடம் நான் வரவில்லை. சேகரித்து கொடுங்கள் என கேட்டு வந்துள்ளேன். மகளிரிடம் ஏன் பேசுகிறேன் என்றால் ஆண்கள் செல்ல முடியாத இடத்திற்கெ...
பிரதமர் அறிவித்த 20 லட்சம் கோடியில் ஏழைகளுக்கு என்ன கிடைக்கும் என்பதை பார்க்க காத்திருக்கிறேன் – கமல்

பிரதமர் அறிவித்த 20 லட்சம் கோடியில் ஏழைகளுக்கு என்ன கிடைக்கும் என்பதை பார்க்க காத்திருக்கிறேன் – கமல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  பிரதமர் அறிவித்த 20 லட்சம் கோடியில் ஏழைகளுக்கு என்ன கிடைக்கும் என்பதை பார்க்க காத்திருக்கிறேன் - கமல் கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு மே 17-ம் தேதி நிறைவுக்கு வரும் நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் நேற்று பேசினார்.   அப்போது அவர் கூறுகையில், வலிமையான இந்தியாவை உருவாக்க இதுவே சிறந்த தருணம். நாம் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 20 லட்சம் கோடி ரூபாய்க்கு பொருளாதார வளர்ச்சிக்கு சிறப்பு திட்டங்கள். இந்த பொருளாதார வளர்ச்சி திட்டத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஊக்கம் கிடைக்கும் என தெரிவித்தார். இந்நிலையில், பிரதமர் மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய் திட்டங்களில் ஏழைகளுக்கு என்ன கிடைக்கப் போகிறது என்பதை எதிர்பார்ப்பேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மக்கள் நீதி...
கொரானா ஸ்டிக்கர் விவகாரம் – கமல் பரபர விளக்கம்

கொரானா ஸ்டிக்கர் விவகாரம் – கமல் பரபர விளக்கம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
கமல்ஹாசன் அலுவலகமாக செயல்படும் ஆழ்வார்பேட்டை வீட்டில் கொரானா தனிமைபடுத்தப்படும் வீடு என்ற அரசின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு கொஞ்ச நேரத்தில் நீக்கப்பட்டது குறித்து கமல் விளக்கம் அளித்து இருக்கிறார். அவரின் விளக்கம்: அக்கறை கொண்ட அனைவருக்கும் வணக்கம், உங்கள் அனைவரின் அன்புக்கும், அக்கறைக்கும் மனமார்ந்த நன்றிகள். எனது இல்லத்தின் வெளியே ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை வைத்து நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த முகவரியில் கடந்த சில ஆண்டுகளாக நான் இல்லையென்பதும், அவ்விடத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்ததும் உங்களில் பலர் அறிந்ததே. எனவே நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையல்ல என்பதையும், வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக நான் கடந்த 2 வாரங்களாக தனிமைப்படுத்துதலை மேற்கொண்டிருக்கிறேன் என்பதையும், அன்புள்ளம் கொண்டோர் அனைவரும் அவ்வாறே ...
நடிகர் கமல் தனிமைபடுத்தப்பட்டாரா அரசு ஒட்டிய கொரானா ஸ்டிக்கரால் பரபரப்பு!

நடிகர் கமல் தனிமைபடுத்தப்பட்டாரா அரசு ஒட்டிய கொரானா ஸ்டிக்கரால் பரபரப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
    நடிகர் கமல் தனிமைபடுத்தப்பட்டாரா அரசு ஒட்டிய கொரானா ஸ்டிக்கரால் பரபரப்பு! உலகம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தி பல லட்சம் மக்களை தாக்கி பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி மிக வேகமாக பரவி வரும் கொரானா பரவல் தமிழகத்திலும் தன் கோர முகத்தை காட்டி வருகிறது. வெளி நாடுகளில் இருந்து சமீபத்தில் ஊர் திரும்பிய அனைவரும் தங்களை தாங்களே தனிமை படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக சுகாதார துறை அறிவுறுத்தி உள்ளது. காரணம் அவர்கள் மூலமாகவே கொரானா தொற்று அதிக அளவில் பரவும் வாய்ப்புகள் இருப்பதால் இந்த நடைமுறைகள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து வெளி நாடுகளில் இருந்து சமீபத்தில் தமிழகம் திரும்பிய திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களை தாங்களே தனிமை படுத்தி கொண்டுள்ளனர். இயக்குனர் மணிரத்னம் மகன் நந்தனும் சமீபத்தில் லண்டனில் இருந்து சென்னை திரும்பியதால் வீட்டில் தனிமைபடுத்திக் கொ...
விசாரணை என்ற பெயரில் மீண்டும் மீண்டும் நடித்து காட்டச்சொல்லி போலீசார் துன்புறுத்துகிறார்கள் – கோர்ட்டுக்கு போன கமல்

விசாரணை என்ற பெயரில் மீண்டும் மீண்டும் நடித்து காட்டச்சொல்லி போலீசார் துன்புறுத்துகிறார்கள் – கோர்ட்டுக்கு போன கமல்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    விசாரணை என்ற பெயரில் மீண்டும் மீண்டும் நடித்து காட்டச்சொல்லி போலீசார் துன்புறுத்துகிறார்கள் - கோர்ட்டுக்கு போன கமல் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறது. கடந்த பிப்ரவரி 1-ந் தேதி நடைபெற்ற படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். படப்பிடிப்பில் நடந்த இந்த திடீர் விபத்து காரணமாக படப்பிடிப்பு முழுமையாக பாதிக்கப்பட்டு பாதியில் நிற்கிறது. இந்த விபத்து காரணமாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை நடைபெற்று வருகிறது. ‌ஷங்கர், கமல்ஹாசன் இருவரையும் விசாரித்தது பரபரப்பானது. இவர்கள் தவிர விபத்து நடந்தபோது படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து வழக்கில் காவல்துறையினர் தொடர்ந்து துன்புறுத்துவதாக நடிக...