திங்கட்கிழமை, மே 13
Shadow

நடிகர்கள்

நாப்கின்  பிரச்னைகளை பேசும் பேட் மேன்

நாப்கின் பிரச்னைகளை பேசும் பேட் மேன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அக்ஷய் குமார் நடிப்பில் இயக்குநர் பால்கி இயக்கியுள்ள திரைப்படம் 'PADMAN'. சோனம் கபூர், ராதிகா ஆப்தே நடித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. நாப்கினின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் கதையம்சம் கொண்ட இப்படம் வரும் குடியரசுத் தினத்தன்று வெளியாகிறது. இப்படத்தின் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். https://youtu.be/-K9ujx8vO_A ...
சிக்கல் தீர்ந்து ரிலீஸ் பரபரப்புக்கு ரெடியான தங்கர்பச்சானின் களவாடிய பொழுதுகள்

சிக்கல் தீர்ந்து ரிலீஸ் பரபரப்புக்கு ரெடியான தங்கர்பச்சானின் களவாடிய பொழுதுகள்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஐங்கரன் நிறுவனம் தயாரிப்பில் தங்கர் பச்சானின் இயக்கத்தில் உருவாகும் படம் ‘களவாடிய பொழுதுகள்’. நீண்ட கால காத்திருப்புக்கு பின் இந்த படம் வெளியாகிறது. https://youtu.be/miqHVx0edtI படம் பற்றி கூறிய பிரபுதேவா... “என் வாழ்நாளில் இது வரை நடிக்காத பாத்திரத்தில் என்னை மறந்து பொற்செழியன் என்னும் பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறேன்” என்றார். மக்களின் மனதில் வாழும் பாத்திரத்தை ஏற்று பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார். பூமிகாவின் பாத்திரமும் அனைவரையும் கவரக்கூடியது. இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் சத்தியராஜ், கருப்பு ராஜா, சத்தியன் நடித்திருக்கிறார்கள். இசை - பரத்வாஜ், பாடல்கள் - வைரமுத்து, அறிவுமதி, கலை - கதிர், படத்தொகுப்பு - பி.லெனின், பிரேம், தயாரிப்பு - கருணாகரன், கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம் - தங்கர் பச்சான். படம் பற்றி கூறிய அவர்.. “ இது காதலிக்க போகிறவர்களுக்கு ...
அரசியலுக்கு வருகிறாரா அரவிந்த்சாமி… அவரே அளித்த பதில்..!

அரசியலுக்கு வருகிறாரா அரவிந்த்சாமி… அவரே அளித்த பதில்..!

CINI NEWS, HOME SLIDER, நடிகர்கள்
‘தளபதி’ படம் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானவர் அரவிந்த் சாமி. மணிரத்னம் இயக்கிய இப்படத்தில் ரஜினிக்கு தம்பியாக அரவிந்த் சாமி நடித்திருந்தார். இப்படத்தில் அரவிந்த் சாமியின் நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது. இதையடுத்து ‘ரோஜா’, ‘மறுபடியும்’, ‘பாம்பே’, ‘இந்திரா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 1999ம் ஆண்டு வெளியான ‘என் சுவாசக் காற்றே’ என்ற படத்திற்குப் பிறகு சிறிய இடைவெளி விட்டு, ‘சாசனம்’ என்ற படத்தில் நடித்தார். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ படம் மூலம் ரீஎன்ட்ரீ ஆனார். ஜெயம் ரவியுடன் நடித்த ‘தனி ஒருவன்’ இவருக்கு சிறந்த வில்லன் நடிகருக்கான பெயரை பெற்றுத் தந்தது. தற்போது இவரது நடிப்பில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. மேலும் மணிரத்னம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிற...
கதைக்காகத் தன் தோற்றத்தை மாற்றிக் கொண்ட’’இமை’’நாயகன்

கதைக்காகத் தன் தோற்றத்தை மாற்றிக் கொண்ட’’இமை’’நாயகன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இமை’ படத்துக்காக அதில் நாயகனாக நடிக்கும் சரிஷ் சிரமப்பட்டுத் தன் தோற்றத்தை மாற்றிக் கொண்டுள்ளார். படு கரடு முரடான வாலிபனுக்கும் கனி போன்ற அப்பாவிப் பெண்ணுக்கும் இடையில் மலரும் காதல் பற்றிய கதை தான் ‘இமை’. இப்படத்தில் நாயகனாக நடித்ததுடன் தயாரிப்பிலும் பங்கெடுத்துள்ளவர் சரிஷ். படத்தில் நடித்த சரிஷ் தன் அனுபவம் பற்றிக் கூறும் போது, “இது ஒரு ரவுடி சார்ந்த கதைதான் என்று கேள்விப்பட்டதுமே என் தோற்றத்தை இயக்குநர் கூறியபடி மாற்ற ஆரம்பித்தேன். கொழு கொழு உடம்பை இளைக்க வைத்தேன். தாடி வளர்க்கத் தொடங்கினேன். தலையைச் சரியாக வாராமல் முடியை வளர்த்தேன். என் நிறத்தை மங்கலாக்க வெயிலில் நின்று கறுத்தேன். இவ்வளவும் செய்து மாறிய பின் , என் தோற்றம் இயக்குநருக்குப் பிடித்து ஒரு வழியாகத் திருப்தி வந்த பிறகுதான் படப்பிடிப்புக்கே போனோம். படப்பிடிப்பில் நடித்துப் பார்த்த போது தான் நடிப்பு என்றால...
விஷால் ஆசைப்பட்ட வில்லன் வேடம்…!

விஷால் ஆசைப்பட்ட வில்லன் வேடம்…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஷால் பிலிம் பேக்டரி சார்பாக விஷால் நடித்து தயாரிக்கும் திரைப்படம் “ இரும்புத்திரை “. இப்படத்தில் கதாநாயகனாக விஷால் , கதாநாயகியாக சமந்தா நடிக்க பவர்புல்லான வில்லன் வேடத்தில் நடிகர் அர்ஜுன் நடிக்கிறார். ஜார்ஜ் C வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் , ஆண்டனி L ரூபன் படத்தொகுப்பில் உருவாகும் இப்படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. படத்தை இயக்குநர் மித்ரன் கூறியது :- இரும்புத்திரை படத்தின் கதையை முதலில் நான் விஷாலிடம் சொல்லும் போது அவர் இந்த கதை பிடித்திருந்தால் விஷால் பிலிம் பேக்டரியின் மூலம் வேறு யாரையாவது கதாநயாகனாக வைத்து இப்படத்தை தயாரிக்கலாம் என்ற முடிவில் தான் கதையை கேட்டார். நான் கதையை சொல்லி முடித்ததும் இப்படத்தின் கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த கதையில் நானே நடிக்கிறேன். நானே தயாரிக்கிறேன். நாம இந்த படத்தை பண்றோம். ஆனால் நான் வில்லன் வேடத்தில் தான் நடிப்பேன் என்றார். நான் ...
வாங்கிய கடனை அடைக்காமல் தப்பிக்க சசிக்குமார் சுமத்தும் பொய் குற்றச்சாட்டு… இயல்பாக இல்லாமல் சினிமாத்தனமாக இருக்கும் தற்கொலைக் கடிதம் – ஜாமீன் மனுவில் அன்புச்செழியன் பகீர்

வாங்கிய கடனை அடைக்காமல் தப்பிக்க சசிக்குமார் சுமத்தும் பொய் குற்றச்சாட்டு… இயல்பாக இல்லாமல் சினிமாத்தனமாக இருக்கும் தற்கொலைக் கடிதம் – ஜாமீன் மனுவில் அன்புச்செழியன் பகீர்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
அன்புச்செழியனை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் தொடர்ந்து முயற்சித்தும் பலன் கிடைக்காததால், அன்புச்செழியன் வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணைக்கு மாற்றி காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். நடிகரும் இயக்குனருமான சசிகுமாரின் உறவினரும், அவரது நிறுவனத்தின் இணைத்தயாரிப்பாளருமான அசோக்குமார் நவம்பர் 21-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நடிகர் சசிக்குமார் வளசரவாக்கம் போலீஸில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் அசோக்குமாரை தற்கொலைக்கு தூண்டியதாக அன்புசெழியன் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர். போலீஸாரின் கைதுக்கு அஞ்சி அன்புச்செழியன் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தேடி வருகின்றனர். அவர் பதுங்கி இருப்பதாக சந்தேகப்பட்ட தென் மாவட்டங்கள், பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களு...
மலேசியாவில் நடிகர் சங்கத்தின் நட்சத்திர விழா, ஜனவரி 5,6 தேதிகளில் படப்பிடிப்புகள் ரத்து!

மலேசியாவில் நடிகர் சங்கத்தின் நட்சத்திர விழா, ஜனவரி 5,6 தேதிகளில் படப்பிடிப்புகள் ரத்து!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் பிரமாண்டமான ‘நட்சத்திர விழா 2018’ வரும் ஜனவரி 6-ம் தேதி மலேசியாவிலுள்ள புக்கட் ஜலீல் இன்டோர் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட், கால்பந்து விளையாட்டுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அன்று முழுவதும் நடைபெறுகிறது. இதில் ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் மூத்த நடிகர் நடிகைகளும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்கள். மேலும் எல்லா நடிகர்-நடிகைகளும் கலந்து கொள்ள வசதியாக ஜனவரி 5,6 ஆகிய இரண்டு நாட்கள் படப்பிடிப்புகளுக்கு விடுமுறை அளிக்குமாறு தென்னிந்திய நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்தது.இதனை ஏற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஜனவரி 5,6 ஆகிய இரண்டு நாட்கள் படப்பிடிப்புகள் ரத்து செய்து விடுமுறை அளிப்பதாக அறி...
மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறாரா விஜய்..!

மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறாரா விஜய்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விஜய் மற்றும் முருகதாஸ் வெற்றிக்கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் விஜய்-62 படத்திற்கான படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் துவங்குகிறது. இந்த படத்திற்கான அப்டேட்டுகளை விஜய் ரசிகர்கள் கண் கொத்திப் பாம்பாக பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். இப்படத்திற்காக ஒளிப்பதிவாளராக கிறிஸ் கங்காதரன், எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத், இசையமைப்பாளராக ஆஸ்கர் ரஹ்மான் என ஒரு நட்சத்திர பட்டாளமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கத்தி படத்தை போலவே இரண்டு விஜய் இருப்பார்கள். இதில் ஒரு விஜய்க்கு நாயகியாக ரகுல் ப்ரீத் சிங் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டார். இது வரை விஜயை பார்க்காத கோணத்தில் காட்டப் போகிறார் முருகதாஸ். மேலும், இரண்டு விஜயில் ஒரு விஜய் உடல் மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால்,  படத்தின் குழு விஜய் -62வில் தளபதி அப்படி (மாற்றுத்தி...
ஆதாரம் இருந்தால் S.A.சந்திரசேகர் மீது வழக்கு பதியலாம் ஐகோர்ட் உத்தரவு

ஆதாரம் இருந்தால் S.A.சந்திரசேகர் மீது வழக்கு பதியலாம் ஐகோர்ட் உத்தரவு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதை லஞ்சம் கொடுப்பது என விமர்சித்த இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற விசிறி எனும் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், மக்கள் திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதை கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பது என விமர்சித்தார். இது இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இரு மதங்களுக்கிடையே விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய அவர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி இந்து முன்னணி நிர்வாகி வி.ஜி.நாராயணன் என்பவர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். அவரின் புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆணையர் வ...
ராகுல்காந்திக்கு கமல்ஹாசன் வாழ்த்து..!

ராகுல்காந்திக்கு கமல்ஹாசன் வாழ்த்து..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
நடிகர் கமல்ஹாசன் அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அரசியல் கட்சி தொடங்கப்போவதாகவும் அறிவித்துள்ளார். இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல்காந்தி பதவி ஏற்றுள்ளார். இதற்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- ராகுல்காந்திக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் இருக்கை வரையறுக்க கூடியது அல்ல. ஆனால் உங்கள் தகுதியை நீங்கள் வரையறுக்க முடியும்....