பட்டியலில் பெயர் வருவதற்கு முன்பே வேட்பு மனுத்தாக்கல் செய்த திமுக நகர செயலாளர் மனைவி! அதிர்ச்சியில் உ.பி.க்கள்!
வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பாகவே மாநகராட்சி தேர்தலுக்கு தி.மு.க நகரச் செயலாளரின் மனைவி வேட்புமனு தாக்கல் செய்த விவகாரம் அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
நகராட்சியாக இருந்த கடலூர், மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்ட பின்பு முதல் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது. வரும் 19-ம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலுக்காக, கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி முதல் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுவருகின்றன.
புதிதாகத் தரம் உயர்த்தப்பட்டிருக்கும் கடலூர் மாநகராட்சியில் இருக்கும் 45 வார்டுகளைச் சேர்ந்த 42,479 வாக்காளர்கள் வாக்களிக்கவிருக்கின்றனர்.
நேற்று முன்தினம் 30-ம் தேதி கடலூர் மாநகராட்சி, ஆறு நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க வெளியிட்டது. அதையடுத்து அந்த வேட்பாளர்கள் பிரசாரத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
அதேசமயம் ...