திருப்பதி ஏழுமலையானை போல் நித்யானந்தாவின் காஸ்டியூம்..!
திருப்பதி ஏழுமலையானை போல் நித்யானந்தாவின் காஸ்டியூம்..!
சாமியார் நித்யானந்தாவின் புதிய புகைப்படங்களை கைலாச முகநூல் பக்கத்தில் நித்யானந்தா டீம் வெளியிட்டுள்ளது.
உலகநாயகனுக்கு பிறகு விதவிதமான கெட்டப்புகள் அதிகம் போட்டவர் நித்யானந்தா தான் என்று இவரது சீடர்கள் பெருமையாக கூறுகின்றனர்
ஒரு பக்கம் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை வேகமெடுக்க, மறுபக்கம், குஜராத் ஆசிரம வழக்கு நெருக்கடி ஏற்படுத்த, நித்யானந்தா எங்கே இருக்கிறார் என அவரது சீடர்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
அவரோ, எங்கோ இருந்தபடி தினசரி தனது பேஸ்புக் பக்கம் மூலம் சீடர்களுக்கு அறிவுரைகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்.
இந்தியாவிலிருந்து தப்பிய நித்யானந்தா தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள ஈக்வேடார் நாட்டின் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா என்று பெயரிட்டு தனி நாடாக மாற்ற ஐ.நாவுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்...




