பெண்கள் வார்டில் பாமக ஆண் வேட்பாளர் மனு தாக்கல்.
தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லமல் இல்லை. அதே நேரம் சுவாரஸ்யங்களுக்கும் குறைவில்லை.
ஜெயலலிதா போல வேடம் அணிந்த குழந்தயை அழைத்து வந்து மனுத்தாகல் செய்த அமமுக வேட்பாளர். வெட்பு கட்டனத்தை சில்லறைகளாக கொண்டு வந்த வேட்பாளர்.
இப்போது அந்த வரிசையில் பழனி,ஆயக்குடி 6வது வார்டு பகுதி பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் பாமக சார்பாக ஆறுமுகம் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்ததால் பரபரப்பு.
கடைசியில் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது தனிக்கதை. பெண்கள் வார்டு என்று தெரியாமலேயே வேட்புமனு செய்யும் பாமகவின் அவல நிலை.
...
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த வன்னியர் கூட்டமைப்பின் தலைவர். ஷாக் ஆன பாமக வட்டாரம்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அம்மா தவசாயி சமீபத்தில் மரணம் அடைந்ததை தொடர்ந்து பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் முதல்வருக்கு ஆறுதல் சொல்லி இரங்கல் அறிக்கை வெளியிட்டனர்.
இந்த சூழலில் வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்.ராமமூர்த்தி சேலத்தில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
தேர்தல் பரபரப்பு சூழலில் இந்த ஆறுதல் சந்திப்பு கூட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே ஒட்டுமொத்த வன்னியர்களும் எங்களிடம் தான் இருக்கிறார்கள் என தேர்தலுக்கு தேர்தல் சொல்லி தொகுதிகளை வாங்கிக் கொள்ளும் பாமகவுக்கு முதல்வரை வன்னியர்கள் கூட்டமைப்பின் தலைவர் சந்தித்தது பெரும் ...