இலங்கையில் பேப்பர் இல்லாததால் லட்சக்கணக்கான மாணவர்களின் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இலங்கை சுதந்திரம் அடைந்த 1948-ம் ஆண்டுக்கு பின்னர் தற்போது மிக மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
குறிப்பாக பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அந்நாட்டிடம் போதுமான டாலர்கள் இல்லை என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
எழுதுவதற்கு பயன்படுத்தப்படும் பேப்பரை பொருத்தளவில் அவை வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில் பேப்பரை இறக்குமதி செய்வதற்கு போதுமான டாலர்கள் இல்லாததால் பேப்பருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன
இதுகுறித்து இலங்கை கல்வி அதிகாரிகள் கூறுகையில், 'தேர்வு நடத்துவதற்கு போதுமான பேப்பர் ...
திவாலாகும் நிலை... சீனாவுக்கு கடனை அடைக்க இந்தியாவிடம் 1 பில்லியன் கடன் கேட்டு கையேந்த இலங்கை திட்டம்...!
கொரோனா பெருந்தொற்றால் பல்வேறு உலக நாடுகளும் நிதி நெருக்கடிகளைச் சந்தித்தன... சந்தித்துவருகின்றன.
மருத்துவத்துக்கும் தடுப்பூசிகளுக்கும் பெருந்தொகையை ஒதுக்கின. கொரோனவால் ஏற்பட்ட வேலைவாய்ப்பின்மை, வருவாய் இழப்பு உள்ளிட்டவற்றால் பொருளாதாரச் சிக்கல்கள் உலகம் முழுவதுமே ஏற்பட்டிருந்தன.
அதிலும் இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில், நாடு திவாலாகும் அளவுக்கான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாகச் செய்திகள் சொல்லப்படுகின்றன
குறிப்பாக இலங்கையின் சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கும் வருவாயை பெரிதும் நம்பியிருக்கும் இலங்கையின் பொருளாதாரம் கடந்த 2 ஆண்டுகளாக கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
விலைவாசி விண்ணை முட்டும் அளவில் உள்ளது.
ஏற்கனவே பல்லாயி...