சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: vaiko

போலி பத்திரப்பதிவு ஒழிப்பு சட்டத்துக்கு வைகோ பாராட்டு!

போலி பத்திரப்பதிவு ஒழிப்பு சட்டத்துக்கு வைகோ பாராட்டு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தில் சில ஆண்டுகளாக போலியாகவும், ஆள்மாறாட்டம் செய்தும், நிலம் மற்றும் சொத்துகளை மோசடியாக பத்திரப்பதிவு செய்து வருவது தொடர்ந்து கொண்டிருந்தது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டப் பேரவையில் சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி போலி ஆவணம், ஆள் மாறாட்டம் போன்ற காரணங்களின் அடிப்படையில் மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை பதிவுத்துறையே ரத்து செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. இச்சட்ட முன்வரைவுக்கு கடந்த ஆகஸ்டு 6-ந் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தவுடன், சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. நில அபகரிப்பு செய்து, போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக பத்திரப் பதிவு செய்யப்பட்டது குறித்து மாவட்டப் பதிவாளர்களால் புகார் மனு பெறப்படும் பட்சத்தில், மனுதாரர் ...
‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரை தடை செய்ய வேண்டும் –  வைகோ மத்திய மந்திரிக்கு கடிதம்!

‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரை தடை செய்ய வேண்டும் – வைகோ மத்திய மந்திரிக்கு கடிதம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரை தடை செய்ய வேண்டும் - வைகோ மத்திய மந்திரிக்கு கடிதம்! நடிகை சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி உள்ள ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வருகிற ஜூன் 4-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இத்தொடரின் டிரெய்லர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடருக்கு தடைகோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: “தி பேமிலி மேன்-2 என்ற இந்தி வெப் தொடர் ஒளிபரப்புவதை நிறுத்தக்கோரி இந்த கடிதத்தை எழுதி இருக்கின்றேன். இந்தி மொழியில் வெளியாகும் இந்த தொடரின் முன்னோட்டக் காட்சிகள் சமூக வலைதளங்களி...
விவசாயிகளுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார்- மு.க.ஸ்டாலின்

விவசாயிகளுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார்- மு.க.ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான திமுக கூட்டணி கட்சிகள் நடத்திய உண்ணாவிரத போராட்டம் நிறைவு பெற்றது. முன்னதாக பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:- புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான இந்த உண்ணாவிரத போராட்டம் அனுமதியில்லாமல் தடையை மீறி நடைபெறுகிறது. தமிழக அரசு என்ன வழக்கு போட்டாலும் அதனை எதிர்கொள்ள நாங்க தயாராக உள்ளோம். சிறைக்கு போகும் ஆர்வத்துடன் போராட்டத்தை நடத்தினேன்.  “விவசாயிகள் நலன் பற்றி சிந்திக்காமல் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது. 1957ல் கருணாநிதியின் முதல் சட்டமன்ற பேச்சே விவசாயிகள் பற்றித்தான்; நான் அவருடைய மகன். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார். யாரை பாதுகாக்க வேளாண் சட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். போராடும் விவசாயிகளை அந்நியக் கைக்கூலிகள், தீவிரவாதிகள் என மத்திய...
தமிழக அரசுப் பள்ளிகளில் சமஸ்கிருதம் திணிப்பு – வைகோ கண்டனம்

தமிழக அரசுப் பள்ளிகளில் சமஸ்கிருதம் திணிப்பு – வைகோ கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  *தமிழக அரசுப் பள்ளிகளில் சமஸ்கிருதம் திணிப்பு!* *வைகோ கடும் கண்டனம்* மத்திய பா.ஜ.க. அரசு உருவாக்கியுள்ள புதிய கல்விக் கொள்கை பிற்போக்குத்தனமான இந்துத்துவ சனாதன கோட்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. இந்தி, சமஸ்கிருத மொழிகளை தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறை வரையில் திணிப்பதற்கு தேசியக் கல்விக் கொள்கை -2020 வழி செய்கிறது என்பதால், கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறோம். தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே கடைப்பிடிக்கப்படும் என்று ஒப்புக்காக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி அரசு, பா.ஜ.க. அரசின் இந்தி, சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு துணைபோய்க்கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு அரசுப் பள்ளிகளுக்கு, பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. அதில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் சமஸ்கிருதம் ப...
வெளிமாநிலங்களில் சிக்கிக்கொண்ட தமிழக லாரி டிரைவர்களுக்கு  உதவுங்கள் வைகோ கோரிக்கை

வெளிமாநிலங்களில் சிக்கிக்கொண்ட தமிழக லாரி டிரைவர்களுக்கு உதவுங்கள் வைகோ கோரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    வெளிமாநிலங்களில் சிக்கிக்கொண்ட தமிழர்களுக்கு உதவுங்கள் வைகோ கோரிக்கை தமிழ் பெருமக்களே, கொரோனா என்றாலே நடு நடுங்க வைக்கின்ற இந்தக் கொடிய தொற்று நோய் அனைத்து மட்டத்திலும் வேகமாகப் பரவி வருகின்றது. உலகம் முழுவதும் இதுவரை ஐந்து இலட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். 24 ஆயிரம் பேர் இறந்து விட்டார்கள். அறிவியலில் நாங்கள்தான் முதல் இடம் என்று சொல்லிக்கொண்டு இருந்த அமெரிக்காதான் இப்பொழுது இந்த நோயின் பாதிப்பில் முதல் இடத்தில் இருக்கின்றது. இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் ஏராளமானவர்கள் இறந்து விட்டார்கள், இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் இந்த நோயின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும்? இது இன்னும் வீரியமாகுமா? அல்லது தணியுமா? என்பது ஒரு வார காலத்திற்குப் பிறகுதான் தெரிவிக்க முடியும் என்று மருத்துவ அறிஞர்கள் ...
காந்தி உருவத்தை துப்பாக்கியால் சுட்டவர் தேச பக்தர்… நான் தேச துரோகி – என்னத்த சொல்ல வைகோ ஆதங்கம்

காந்தி உருவத்தை துப்பாக்கியால் சுட்டவர் தேச பக்தர்… நான் தேச துரோகி – என்னத்த சொல்ல வைகோ ஆதங்கம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  என்னுடைய வேட்புமனு உறுதியாக ஏற்றுக்கொள்ளப்படும் என நம்புகிறேன்! திண்டுக்கல் செய்தியாளர்களிடம் வைகோ விளக்கம் மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இன்று பகல் 12 மணிக்கு, திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் அளித்த விளக்கம் வருமாறு: நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், ஆருயிர்ச் சகோதரர் மாண்புமிகு தளபதி ஸ்டாலின் அவர்கள் என்னோடு தொடர்புகொண்டு பேசினார். ‘நீங்கள் மாநிலங்கள் அவை உறுப்பினராகச் செல்வதற்கு விருப்பம் இருந்தால், நீங்கள் வேட்புமனு தாக்கல் செய்வதாக இருந்தால், மாநிலங்களவை உறுப்பினருக்கான வாய்ப்பு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வழங்கப்படும் என்று சொன்னார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்துச் சகோதரர்களும் நான் மாநிலங்கள் அவைக்குச் செல்ல வேண்டும்...
மேல்சபை எம்பி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியீடு..!

மேல்சபை எம்பி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியீடு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மேல்சபை எம்பி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியீடு..! தமிழகத்தில் இருந்து காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 1ம் தேதி முதல் வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. ஜூலை 8ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் வேட்பு மனு பரிசீலனை 9 ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுவை திரும்பப் பெற ஜூலை 11-ஆம் தேதி கடைசி நாள். ஜூலை 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இருந்து கனிமொழி (திமுக), அதிமுகவைச் சேர்ந்த அருணன், மைத்ரேயன், லஷ்மணன், இரத்னவேல் , கம்யூனிஸ்ட் ராஜா(அதிமுக ஆதரவு) ஆகியோரின் பதவி காலம் முடிவடைவதால் இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது உள்ள சட்டசபை உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் திமுகவுக்கு 3 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும் வெற்றி பெற முடியு...
தமிழ் வீரன் வைகோவின் குரல் மீண்டும் பாராளுமன்றத்தில் ஒலிக்கும் – வைரமுத்து நெகிழ்ச்சி

தமிழ் வீரன் வைகோவின் குரல் மீண்டும் பாராளுமன்றத்தில் ஒலிக்கும் – வைரமுத்து நெகிழ்ச்சி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நாடாளுமன்றத்தில் விரைவில் தமிழ் வீரனின் குரல் ஓங்கி ஒலிக்கும்! வைகோவை சந்தித்தபின் வைரமுத்து பேட்டி மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களை, இன்று மாலை 6 மணி அளவில் அவரது அண்ணாநகர் இல்லத்தில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் சந்தித்த்து, 17ஆவது நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டதற்காக நன்றி தெரிவித்தார். அது வைகோ மகன்  துரை வையாபுரியும் உடன் இருந்தார். வைகோவை  சந்தித்து விட்டு வந்து செய்தியாளர்களிடம் கவிஞர் வைரமுத்து கூறியதாவது:- “திராவிட இயக்கத்தின் சிங்க முகத்தைப் பார்க்க வந்தேன்; போர்வாளை வாழ்த்த வந்தேன். அண்மைக் காலமாக நான் மகிழ்ச்சியில் இருக்கிறேன். தாய்க் கழகத்தோடு, கலைஞர் வளர்த்த பேரியக்கத்தோடு, தளபதியோடு புரட்சிப் புயல் வைகோ அவர்கள் தோழமையாக, நட்பாக, அன்பாக, குடும்பமாக இணைந்து கொள்கைக் கூட்டணியை வளர்த்தெடுக்கிறா...
தமிழகத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் மோடியை தேர்தலில் மக்கள் தூக்கி எறிய வேண்டும் – மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

தமிழகத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் மோடியை தேர்தலில் மக்கள் தூக்கி எறிய வேண்டும் – மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 27-ஆவது பொதுக்குழு   தீர்மானங்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 27-ஆவது பொதுக்குழு, இன்று 06.03.2019 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு, சென்னை, அண்ணா நகர், விஜயஸ்ரீ மகாலில் கழக அவைத்தலைவர் திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.* *இப்பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:* *தீர்மானம் எண். 1 :* இந்தியத் துணைக்கண்டத்தில் தனித்துவ அடையாளம் கொண்ட, நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கம், தமிழகத்தில் ஏற்படுத்தி இருக்கின்ற சமூக, அரசியல், பொருளாதார மறுமலர்ச்சி, பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்கதாகும். இந்தியத் துணைக்கண்டத்திற்கே வழிகாட்டுகின்ற சமூக நீதித் தத்துவத்திற்கு அடித்தளம் அமைத்ததும் திராவிட இயக்கம்தான். திராவிட இயக்கத்தின் முதல் மூன்று தலைவர்களான டாக்டர் சி. நடேசனார், சர் பிட்டி. தியாகராயர்,...
பிரதமர் மோடி பதவியில் இருப்பது நாட்டின் சாபக்கேடு – வைகோ குற்றச்சாட்டு

பிரதமர் மோடி பதவியில் இருப்பது நாட்டின் சாபக்கேடு – வைகோ குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இலக்கியப்பீடம் மாத இதழ் ஆசிரியராக இருந்த மறைந்த விக்கிரமனின் 3-ம் ஆண்டு நினைவு விழா, இலக்கியப்பீடம் மாத இதழ் மற்றும் அனைத்து இந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் சென்னை தியாகராயநகரில் உள்ள வாணி மகாலில் நேற்று நடைபெற்றது. விழாவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கவிஞர் ரமணனுக்கு, எழுத்தாளர் சிவசங்கரி வழங்கும் இலக்கியப்பீடம்-சிவசங்கரி விருது மற்றும் ரூ.10 ஆயிரத்துக்கான பொற்கிழி ஆகியவற்றை வழங்கினார். விழா முடிவில் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: நாட்டின் 90 கோடி விவசாயிகளின் பிரதிநிதிகளாக லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி உள்ளனர். 4 மாத காலமாக சாலையில், வெயிலிலும், மழையிலும், பனியிலும் கிடந்த விவசாயிகளை பார்க்க 5 நிமிடம் ஒதுக்காத பொறுப்பற்ற ஒரு பிரதமர் பதவியில் இருப்பது இந்த நாட்டின் சாபக்கேடு என்று நினைக்கிறேன் வெளிந...