பரபரப்பான 2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா விடுதலை… வழக்கு கடந்து வந்த பாதை
மத்தியில் முன்பு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா தொலைத்தொடர்பு துறை மந்திரியாக இருந்தார்.
அப்போது, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராயின் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தின. இதில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியதாக கூறப்படும் புகார் தொடர்பான வழக்கும் அடங்கும்.
இந்த வழக்கில் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்ட பலர் மீதும் மற்றும் சில நிறுவனங்களின் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் டெல்லியில...









