புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

பெண் நிருபரிடம் மன்னிப்பு கேட்டார் கவர்னர் புரோஹித்!

பெண் நிருபரிடம் மன்னிப்பு கேட்டார் கவர்னர் புரோஹித்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பெண் பத்திரிக்கையாளர் கன்னத்தில் தட்டியதற்காக வருத்தத்துடன் மன்னிப்பு கோரினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். அருப்புகோட்டை கல்லூரி மாணவிகளை பேராசிரியர் பாலியல் ரீதியாக தவறான முறையில் நடக்க கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்து அவர் கைது செயப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் நேற்று மாலை கிண்டியில் உள்ள ராஜ் பவனில்  செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் நிறைவு பகுதியில் பெண் நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்காமல் அவரது கன்னத்தை தட்டியுள்ளார். ஆளுநரின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில் தனது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ள ஆளுநர்,  “பெண் பத்திரிக்கையாளாரின் கேட்ட கேள்வி நல்ல கேள்வியாக இருந்ததால் அதனை பாராட்டும் விதமாக கன்னத்தை தட்டினேன், எனது பேத்தியாக நினைத்து தான் கன்னத்தை தட்டினேன்” எனவும்  நானும் 40 வருடங்கள...
சினிமா ஸ்ட்ரைக் வாபஸ் ஆனது!

சினிமா ஸ்ட்ரைக் வாபஸ் ஆனது!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
 பல தரப்பினரும் பாதிக்கப்பட்ட நிலையில் சினிமா சங்கங்கள் தொடர்பாக நேற்று நடை பெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டியதை தொடர்ந்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த சினிமா ஸ்ட்ரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது. டிஜிட்டல் கட்டணத்தைக் குறைத்தல், கேளிக்கை வரி நீக்கம், டிக்கெட் கட்டணம், ஆன்லைன் பதிவுக் கட்டணம் மற்றும் பார்க்கிங், தின்பண்டங்களின் விலை குறைப்பு உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் திரைத்துறையினரின் வேலைநிறுத்தப் போராட்டம் கடந்த 47 நாட்களாக நடைபெற்று வந்தது. முன்னதாக நடைபெற்ற  பேச்சுவார்த்தைகளில்,  தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுடனும், திரையரங்கு உரிமையாளர்களுடனும் கியூப் நிறுவனம் எந்தவித உடன்பாட்டுக்கும் வரவில்லை. இந்நிலையில் இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டால் மட்டுமே தீர்வு காண  முடியும் எனவும் கூறப்பட்டது. அதை தொடர்ந்து கோரிக்கைகளுக்கு  தீர்வு ...
பூர்ணா நடிக்கும் பிரமாண்ட பேய் படம் “ குந்தி “

பூர்ணா நடிக்கும் பிரமாண்ட பேய் படம் “ குந்தி “

MOVIES, திரைப்படங்கள்
அன்னை  திரைக்களம் சார்பில்  மே.கோ.உலகேசு குமார்,  மேடூர் பா.விஜய ராகவன்,  சா.பா.கார்த்திராம் இணைந்து  தயாரிக்க SFF  TV   வழங்கும் படம் “ குந்தி “ இந்த படத்தில் பூர்ணா கதாநாயகியாக நடிக்கிறார். பூர்ணா ஜோடியாக அபினவ் நடித்தி ருக்கிறார். ஆடுகளம் கிஷோர், தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வில்லனாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அபிமன்யூ சிங் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் பேபி தன்வி, பேபி கிருத்திகா இருவரும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பலர் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு -        கர்ணா இசை           -        யஜமன்யா எடிட்டிங்     -        SFF TV காளிராஜ், சந்திரபிரகாஷ் பாடல்கள்    -        வலங்கைமான், நூர்தின், முருகானந்தம், வள்ளுவர்தேவன் இணை தயாரிப்பு      -       மேடூர் பா.விஜயராகவன், சா.பா.கார்த்திராம் இயக்கம்  ...
மாணவிகளை பலான வேலைக்கு முயன்ற  கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது

மாணவிகளை பலான வேலைக்கு முயன்ற கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது

HOME SLIDER, NEWS, செய்திகள்
அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகள் 4 பேரை தவறாக வழிநடத்த முயன்ற கல்லூரி உதவிப் பேராசிரியை திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். அத்துடன் மாணவிகளை பேராசிரியை நிர்மலா தேவி தவறாக வழிநடத்த முயன்ற விவகாரத்தில் உயர் மட்ட விசாரணைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரி உள்ளது. இங்கு, கணிதத் துறை உதவிப் பேராசிரியையாக ஆத்திபட்டியைச் சேர்ந்த நிர்மலாதேவி (46) பணிபுரிந்து வருகிறார். இவர், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் நடைபெறும் போட்டித் தேர்வுகள், கருத்தரங்குகள் முதலியவற்றுக்கு மாணவ, மாணவிகளை வெளியிடங்களுக்கு அழைத்து செல்வது வழக்கமாம். இந்நிலையில், நிர்மலாதேவி, கடந்த மாதம் அவரது துறையில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் சிலரை செல்லிடப்பேசியில் தொடர்புகொண்டு, பல்கலைக்கழக அதிகாரிகள் எதிர்பார்ப்பதை நிறைவேற்றினால...
சினிமா வாய்ப்பு கேட்டால் படுக்கைக்கு அழைக்கிறார்கள். !-.கதறி அழுத தெலுங்கு நடிகைகள் !!

சினிமா வாய்ப்பு கேட்டால் படுக்கைக்கு அழைக்கிறார்கள். !-.கதறி அழுத தெலுங்கு நடிகைகள் !!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
கடந்த சில வாரங்களாக பத்திரிக்கைகளில் அதிகம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய செய்தி செக்ஸ் டார்ச்சர் குறித்த நடிகைகளின் பேட்டி மற்றும் அனுபவங்கள்தா. டோலிவுடோ, மோலி வுட்டோ,கோலிவுட்டோ அல்லது பாலிவுட்-டில் கூட  திரையுல கில் பாலியல் தொல்லைகள் காலம் காலமாக இருக்கதான் செய்கிறது. ஆனால்  தற்போது நடிகைகள் வெளிப்படையாகவே தங்களை தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்ததாக கூறி வருகிறார்கள். புகாரும் அளித்து வருகின்றனார். இந்த நிலையில்  நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் பெண்களுக்கு தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக பல நடிகைகள் செய்தியாளர்கள் முன்பு கதறி அழுதனர் முன்னதாக  நடிக்க வாய்ப்பு கேட்கும் பெண்களை படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுப்பதாக தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகை ஸ்ரீரெட்டி பகிங்கரமாக பாலியல் புகார் தெரிவித்து இருப்பது ஆந்திரா, தெலு...
மின் பிம்பங்கள் வழங்கும் ‘ஒரு சில பல நிமிடமும் பேச்சும்’ மேடை நாடகம்..!

மின் பிம்பங்கள் வழங்கும் ‘ஒரு சில பல நிமிடமும் பேச்சும்’ மேடை நாடகம்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் மறக்க முடியாத காவியங்களை படைத்த நிறுவனம் ‘மின் பிம்பங்கள்’. இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் கைவண்ணத்தில் இந்நிறுவனத்தின் தயாரிப்பாக வெளியான ‘கையளவு மனசு’, ‘ஜன்னல்’, ‘ரயில் சிநேகம்’, மற்றும் பிரமிக்க வைத்த தொலைக்காட்சி உலகின் முதல் மர்மத் தொடரான ‘மர்ம தேசம்’, நகைச்சுவையில் தனி முத்திரை பதித்த ‘ரமணி Vs.ரமணி’, ‘வீட்டுக்கு வீடு லூட்டி’ போன்ற தொடர்களை இந்த நிறுவனம்தான் தயாரித்திருந்தது. இப்போது மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படைப்புலகத்தில் கால் வைத்திருக்கிறது ‘மின் பிம்பங்கள்’. இந்த முறை தொலைக்காட்சித் தொடராக இல்லாமல் மேடை நாடகத்தைத் தயாரித்திருக்கிறது. இயக்குநர் சிகரத்திற்கு மிகவும் பிடித்தமான படைப்பு உலகமான மேடை நாடக உலகத்தை மின் பிம்பங்களும் தொட்டிருப்பது பெருமைக்குரியது. இந்த முதல் நாடகத்தை இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மருமகளும், மின...
நதிநீரில் இருந்து அரசியலை அகற்றுங்கள். எல்லாம் தானாக சரியாகும்! பிரகாஷ் ராஜ் யோசனை!

நதிநீரில் இருந்து அரசியலை அகற்றுங்கள். எல்லாம் தானாக சரியாகும்! பிரகாஷ் ராஜ் யோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழக விவசாடிகளை கதறி அழ வைத்து விட்ட காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை ஏதோ சில தசாப்தப் பிரச்னை அல்ல; அது ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலச் சிக்கல். 1807-ம் ஆண்டே காவிரி நதி நீரைப் பங்கீட்டுக் கொள்வதில் சிக்கல் துவங்கிவிடுகிறது. பேச்சு வார்த்தையும் அதே காலக்கட்டத்தில் துவங்கிவிடுகின்றன. பேச்சு வார்த்தை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க 1866-ம் ஆண்டு மைச்சூருக்கான பிரித்தானிய நிர்வாகத்தைச் சேர்ந்த கர்னல் ஆர்.ஜே. சாங்கி மலைச்சரிவில் விழும் மழைநீரை முழுமையாகப் பயன்படுத்தும் நோக்கத்தோடு ஒரு பெருந்திட்டத்தைத் தீட்டுகிறார். இதற்கு முதலில் மெட்ராஸ் மாகாண அரசு ஒத்துக்கொண்டாலும், நாட்கள் செல்லச் செல்ல... இதனால் மெட்ராஸ் மாகாணத்துக்கு வரும் நீரின் அளவு குறையுமே என்று அச்சம் ஏற்படுகிறது. மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குகிறது. பலசுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பின் 1892 பிப்ரவரி 18-ம் தேதி ஒரு ஒப்பந்தம் தயராகிறது....
இயக்குநர் மஜீத்தை வைத்து  படம் தயாரிக்கும் சதா !

இயக்குநர் மஜீத்தை வைத்து படம் தயாரிக்கும் சதா !

CINI NEWS, சினி நிகழ்வுகள்
கதாநாயகி நடிகைகளுக்குக் கதை பிடித்திருந்தால் அவர்களே அப்படத்தை த் தயாரிக்கவும் தயங்குவதில்லை . இதற்கு அண்மை உதாரணம் நயன்தாரா. ‘அறம் ‘ வெற்றிப் படத்தின் கதை பிடித்து அதை நயன்தாராவே தயாரித்தார். படமும் பேசப்பட்டது. பெரிய வெற்றியும் பெற்றது . அவரைப் போல நடிகை சதாவும் தன்னை நாயகியாக வைத்து ‘டார்ச் லைட் ‘ என்கிற படத்தை எடுத்து வருகிற இயக்குநர் மஜீத்தின் திறமையில் நம்பிக்கை வைத்து அவரது இயக்கத்தில் அடுத்த படத்தைத் தயாரிக்க முன்வந்துள்ளார்.  அதற்கு முழு முதற் காரணம் மஜீத் இயக்கியுள்ள ‘டார்ச் லைட் ‘ படம் தான். அப்படி என்ன அந்தப் படத்தில் உள்ளது? பெண்களுக்கான விழிப்புணர்வுப் படமாக ‘டார்ச் லைட்’ படம் உருவாகி வருகிறது. இப்படத்தை இயக்குபவர் விஜய்யை வைத்து ‘தமிழன் ‘படத்தை இயக்கிய அப்துல் மஜீத். கான்பிடன்ட் பிலிம் கேஃப் நிறுவனம் ஆர்.கே ட்ரீம் வேர்ல்டு , ஒயிட் ஸ்க்ரீன் எண்டர்டெய்ன்மெண்ட் ஆகி...
தமிழ் திரையில் 40 ஆண்டு வாழ்க்கையை நிறைவு செய்த ‘விஜயகாந்த்’-க்கு விழா!

தமிழ் திரையில் 40 ஆண்டு வாழ்க்கையை நிறைவு செய்த ‘விஜயகாந்த்’-க்கு விழா!

HOME SLIDER, NEWS, செய்திகள்
 நூறாண்டு  கடந்த நம் நம் தமிழ் திரைப்படத் துறையில் தனது 40 ஆண்டு கால பயணத்தை நிறைவு செய்துள்ள நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்த்-க்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாராட்டு விழா நடத்தப்பட இருக்கிறது. தமிழ் திரையின் மூத்த நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளரு மான விஜயகாந்த் தனது 40 ஆண்டு கால சினிமா பயணத்தை நிறைவு செய்கிறார்.  அதனைக்  கொண்டாடும் விதமாக சென்னையை அடுத்த கரசங்கள் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாராட்டு விழா நடத்தப்படுகிறது. இதில் பல அரசியல் கட்சி பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் கலந்து கொள்கின்றனர். முன்னதாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையில் ,'எனது அன்பான சகோதரர் விஜயகாந்த் அவர்களை வெறுக்கிறவர்கள் கூட ஒரு கட்டத்தில்  நேசிப்பார்கள்'.  இவ்வாறு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ...