செவ்வாய்க்கிழமை, ஜூன் 23
Shadow

Author: Kodanki

ஜூலை 12ம் தேதி பெட்ரோல் பங்க் ஸ்டிரைக்..!

ஜூலை 12ம் தேதி பெட்ரோல் பங்க் ஸ்டிரைக்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பெட்ரோல் பம்ப்களில் தானியங்கி தொழில்நுட்பத்தை ஏற்படுத்தாத பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களை கண்டித்து, ஜூலை, 12ம் தேதி பெட்ரோல் பங்க்குகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. இது குறித்து அகில இந்திய பெட்ரோல் டீலர்கள் சங்கம் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தினசரி மாற்றம் செய்யப்படும் என்ற முடிவுக்கு நாங்கள் துவக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். இதில் வெளிப்படைதன்மை இல்லை என்பது எங்களின் எண்ணமாக உள்ளது.மேலும், தானியங்கி தொழில்நுட்ப வசதி, 100 சதவீத பெட்ரோல் பங்க்குகளிலும் பொருத்தப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் உறுதி அளித்தன. அதை இன்னும் நிறைவேற்றவில்லை. எனவே, ஜூலை, 5ம் தேதி பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதில்லை என்றும், ஜூலை, 12ம் தேதி நாடு முழுவதும் அனைத்து பெட்ரோல் பங்க்குகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் என்றும் முடிவு செய்துள்ளோம்....
எவனவன் – விமர்சனம்

எவனவன் – விமர்சனம்

REVIEWS, விமர்சனம்
சொந்தமாக தொழில் செய்து வரும் நாயகன் அகில், நாயகி நயனாவை காதலித்து வருகிறார். இவர்களது காதலுக்கு நயனாவின் அம்மா மற்றும் அப்பா டெல்லி கணேஷ் சம்மதம் தெரிவிக்கின்றனர். ஒருநாள் நயனாவின் பெற்றோர் வெளியூர் செல்ல, வீட்டில் தனியாக இருக்கும் நயனா, அகிலை துணைக்கு அழைக்கிறாள். இவ்வாறு நயனா வீட்டிற்கு செல்லும் அகில், நயனா இருவரும் வேறு வேறு அறைகளில் தங்குகின்றனர். அடுத்த நாள் காலை, நயனா குளிப்பதை தனது மொபைலில் வீடியோ எடுத்து அதனை நயனாவிடம் காண்பிக்கிறார். அந்த வீடியோவை பார்த்து அகில் மீது கோபமடையும் நயனா, அதனை அழிக்க சொல்ல, அகில் வீடியோவை அழித்து விடுகிறார். ஆனால் தனது வீட்டிற்கு சென்று அந்த வீடியோவை ரெக்கவரி போட்டு எடுத்து விடுகிறார். இந்நிலையில், அகிலின் போன் தொலைந்து போகிறது. மற்றொரு நாயகனான சரணிடம் சிக்கும் அந்த போனை தரச்சொல்லி அகில், அவரை மிரட்டுகிறார். இதனால் கோபமடையும் சரண், போனில் ஏதேனும...
அதாகப்பட்டது மகாஜனங்களே – விமர்சனம்

அதாகப்பட்டது மகாஜனங்களே – விமர்சனம்

REVIEWS, விமர்சனம்
அப்பாவியான நாயகன் உமாபதி கிதார் வாசிப்பதில் வல்லவர். இதனால், அவரது அப்பா பாண்டியராஜன் தன்னுடைய அப்பாவின் நினைவாக உமாபதியின் புகைப்படத்துடன் அவரது முழு விவரம் அடங்கிய கிதார் ஒன்றை அவருக்கு பரிசாக அளிக்கிறார். இந்நிலையில், நாயகனின் நண்பர் பெரிய தொழிலதிபரான நரேனின் வீட்டில் செக்யூரிட்டியாக வேலை செய்கிறார். அவர், நாயகனுக்கு போன் செய்து தனக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும், தான் அவசரமாக அங்கு செல்லவேண்டும் என்பதால், நான் வரும்வரை என்னுடைய வேலையை நீ பார்க்கவேண்டும் என்று நாயகனிடம் கெஞ்சுகிறார். நாயகனும் மனமிறங்கி, அந்த வீட்டில் செக்யூரிட்டியாக வேலை செய்கிறார். வேலைக்கு வந்த சிறிது நேரத்தில் அவர் மயங்கிவிடுகிறார். மயக்கம் தெளிந்தபோது அந்த வீட்டில் அனைவரும் மயங்கிய நிலையில் கிடக்கிறார்கள். இதைப் பார்த்ததும் தன்னுடைய நண்பனுக்கு போன் போட்டு நடந்த விஷயங்களை சொல்கிறார் நாயகன். நண்பரும் என்னால் நீ மாட்ட...
ஜிஎஸ்டி பெயரில் கடைகளில் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை – நிதியமைச்சர் ஜெயக்குமார்

ஜிஎஸ்டி பெயரில் கடைகளில் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை – நிதியமைச்சர் ஜெயக்குமார்

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஜிஎஸ்டி வரி எனக் கூறி கடைகளில் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசின் கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 1000 திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், அபிராமி ராமநாதன் தலைமையிலான திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று நிதி அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்து தங்களது கோரிக்கைகள் தொடர்பாக வலியுறுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அபிராமி ராமநாதன், கேளிக்கை வரி தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து நல்ல முடிவை அறிவிப்பதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளதாக கூறினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ’திரையரங்கங்களுக்கான கேளிக்கை வரியை குறைப்பது தொடர்ப...
ஜி.எஸ்.டிக்கு எதிராக டி.ஆர். நாளை ஆர்ப்பாட்டம்..!

ஜி.எஸ்.டிக்கு எதிராக டி.ஆர். நாளை ஆர்ப்பாட்டம்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஜி.எஸ்.டிக்கு எதிராக ஆரம்பம் முதலே குரல் கொடுத்து வரும் டி.ஆர், நாளை காலை 10.30 மணிக்கு பிலிம்.சேம்பர் முன் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கையில், “ மத்திய அரசின் ஜி.எஸ்.டியும் 30% கேளிக்கை வரியும் சேர்ந்தால் தமிழ்த்திரையுலகம் முற்றிலும் அழிந்துவிடும். ஆகவே, தமிழ் சினிமாவை இந்த இக்கட்டான சூழலில் இருந்து காப்பாற்ற சினிமாவை நேசிக்கும், சினிமாவைக் காப்பாற்றத்துடிக்கும் அத்துனை சினிமா கலைஞர்களும்.நாளை  நடைபெறவிருக்கும் ஆர்ப்பட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும். சினிமாவை நம்பி வரும் இளைஞர்கள் மற்றும் புதிய திறமைகளுக்கு உத்திரவாதமான சூழ்நிலையை ஏற்படுத்தி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் காப்பாற்றும் பொறுப்புடன் நாளை நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளவேண்டும்..” என்று கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் இணையதள உடகவியலா...
மகளிர் சுய உதவிகுழுவுக்கு ரூ.7000 கோடி வங்கி கடன்: சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு

மகளிர் சுய உதவிகுழுவுக்கு ரூ.7000 கோடி வங்கி கடன்: சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு

HOME SLIDER, politics, செய்திகள்
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 7,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்படும் என தமிழக சட்டபையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அவர் கூறியதாவது:- நடப்பாண்டில் ஊரகப் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் கீழ்க்கண்ட அறிவிப்புகளை இம்மாமன்றத்தில் வெளியிடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 1. 2015-16ஆம் ஆண்டில், பல்வேறு வகையான சாலைகளை ஒரே திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், கடந்த 2 வருடங்களில், 8,875 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைகள் 1,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ், 2017-18ஆம் ஆண்டில், 800 கோடி ரூபாய்...
கர்நாடக அரசுக்கு  விஷால் நன்றி..!

கர்நாடக அரசுக்கு விஷால் நன்றி..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படும் என அறிவித்த கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சருக்கு நடிகர் விஷால் நன்றி கடிதம் அனுப்பியுள்ளார். நடிகரும், நடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால், கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நாம் அனைவருமே ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள். பிறந்த இடத்தாலோ வாழும் மாநிலத்தாலே பேசும் மொழியாலோ வேறுபட்டாலும் இந்திய நாட்டின் பிள்ளைகளாக ஒன்றுபடுகிறோம். ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 1-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை நீர்பாசன ஆண்டான கணக்கிடப்படுகிறது. காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக அரசு 205 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும். இதில் ஜுன் மாதம் 10.16 டிஎம்சி தண்ணீரும், ஜுலை மாதம் 42.76 டிஎம்சி, ஆகஸ்ட் 54.72 டிஎம்சி, செப்டம்பர் 29.36 டிஎம்சி, அக்டோ...
கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு: தமிழகத்தில் 1000 திரையரங்குகள் மூடப்பட்டன

கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு: தமிழகத்தில் 1000 திரையரங்குகள் மூடப்பட்டன

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
சினிமா டிக்கெட்டுக்கு அதிகபட்சமாக 28 சதவீதம் சரக்கு, சேவை வரி விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் சினிமா கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சினிமா டிக்கெட்டுக்கு 30 சதவீதம் கேளிக்கை வரி வசூலிக்க புதிய சட்டம் கொண்டு வந்து இருக்கிறது. இந்த சட்டம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேளிக்கை வரி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் 3-ந் தேதி (இன்று) முதல் தியேட்டர்களை மூடுவோம் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்தனர். இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. தியேட்டர்களை மூடினால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், எனவே போராட்டத்துக்கு ஆதரவு தர முடியாது என்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் நடிகர் விஷால் அறிவித்தார். திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை மறுபரிசீலன...
கோலிசோடா கிஷோர் நாயகனாக நடிக்கும்  ” உறுதி கொள் “

கோலிசோடா கிஷோர் நாயகனாக நடிக்கும் ” உறுதி கொள் “

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
APK பிலிம்ஸ் மற்றும் சிநேகம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு " உறுதி கொள்" என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் கோலி சோடா படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மேகனா நடிக்கிறார். மற்றும் காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர் கண்ணன் பொன்னையா,  அகிலேஷ், சர்மிளா ஆகியோர் நடிக்கிறார்கள். எழுதி இயக்கி இருப்பவர்   -       R.அய்யனார். இவர் இயக்குனர் கிருஷ்ணாவிடம் நெடுஞ்சாலை படத்தில் உதவியாளராக பணியாற்றியவர். அவரிடம் படம் பற்றி கேட்டோம்... பள்ளியில் படிக்கிற மாணவர்கள், மாணவிகளிடையே உருவாகும் காதல் தவறானது.. சரியான புரிதல் பக்குவம் இல்லாத வயதில் ஏற்படும் காதல் பருவ மாற்றம் ஏற்படுகிற கால கட்டத்தில் உருவாகும் இனக் கவர்ச்சி தானே தவிர அது காதல் இல்லை. காதலன் கூப்பிடுகிற இடத்துக்கெல்லாம் பெண்கள் போகக் கூடாது..அப்படிப்போனால் என்ன மாதிர...