திமுக அரசு மீது ஆதாரமில்லா குற்றச்சாட்டுகளை சொல்லும் இயக்குனர் பா.ரஞ்சித் ஏன் ஆருத்ரா மோசடி, பாஜக அண்ணாமலை குறித்து வாய் திறக்கவில்லை – திமுக ஐடி விங் கேள்வி?
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைசெய்யப்பட்டது குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் ஒரு பதிவை தனது x பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இது ஆம்ஸ்ராங் மீதான அவரது அன்போ, அல்லது அவரது கொலைக்கு காரணங்களை அறியவேண்டும் என்கிற நோக்கமோ இல்லை. மாறாக ஆளும் திமுக அரசை பழிசொல்ல வேண்டும் என்கிற ஒற்றை நோக்கம் மட்டுமே உள்ளது.
தனது பதிவில் ஆதாரமில்லாத பல குற்றச்சாட்டுகளை அடுக்கும் ரஞ்சித்திற்கு சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறோம் என திமுக ஐடி விங் கேள்வி?
*ஆம்ஸ்ராங் கொலையில் குற்றவாளிகள் சண்டைந்ததும், அவர்கள் சொல்லும் காரணங்கள் சரியாக பொருந்திவருவதும் உங்களுக்குப் புலப்படவில்லையா..? அதை மறுத்து வேறு குற்றவாளிகளை ஏன் தேடுகிறீர்கள்…?
*அப்படி உங்களுக்கு உண்மையான குற்றவாளிகள் என்று யாரையாவது தெரியும் எனில் அவர்களை, போலீசிடமோ, அல்லுத பொதுவெளியிலோ சொல்லாமல். பொத்தாம் பொது...









