புதன்கிழமை, ஜூலை 8
Shadow

Author: Kodanki

பாலியல் தொல்லை பற்றி நடிகைகள் யாரும் தைரியமாக பேசுவது இல்லை – ராதிகா ஆப்தே

பாலியல் தொல்லை பற்றி நடிகைகள் யாரும் தைரியமாக பேசுவது இல்லை – ராதிகா ஆப்தே

CINI NEWS, HOME SLIDER, Photos
அக்‌ஷய் குமார்- ராதிகா ஆப்தே நடித்துள்ள ‘பேட்மேன்’ படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் ராதிகா ஆப்தே அளித்த பேட்டி... “பாலியல் தொல்லை பற்றி நடிகைகள் யாரும் தைரியமாக பேசுவது இல்லை. அப்படி பேசினால் அவர்களுடைய எதிர்காலம் நாசமாகிவிடும். அவர்களுடைய திரை உலக கனவு, கனவாகவே முடிந்துவிடும். இதனால் தான் நடிகைகள் யாரும் பாலியல் தொல்லை குறித்து வாய் திறப்பது இல்லை. பாலியல் தொல்லைகளுக்கு எதிராக பேச வேண்டும். பேசினால் மட்டும் போதாது. வற்புறுத்தல் வரும்போது முடியாது என்றும் கூற வேண்டும். இல்லை யென்றால், அதை நிறுத்த முடியாது. பாலியல் தொல்லை குறித்து துணிச்சலாக பேசுவோருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். இந்த மாற்றம் உடனே நடந்துவிடாது. மாற்றம் ஏற்பட மக்களுக்கு தைரியம் வர வேண்டும். எனக்கு மோசமான பாலியல் தொந்தரவு அனுபவம் எதுவும் இல்லை. எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்கள் பற்றி ஏற்கனவே பேசிவிட்டே...
நான் ஒரு ரஜினி ரசிகை பக்கா பட விழாவில் நிக்கிகல்ராணி அறிவிப்பு..!

நான் ஒரு ரஜினி ரசிகை பக்கா பட விழாவில் நிக்கிகல்ராணி அறிவிப்பு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
அறிமுக இயக்குனர் எஸ்.எஸ்.சூர்யா இயக்கத்தில் விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி, பிந்து மாதவி, சூரி, ரவி மரியா, சதீஷ், ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, இமான் அண்ணாச்சி, வையாபுரி முதலானோர் நடிக்கும் படம் ‘பக்கா’. சத்யா இசை அமைக்கும் இந்த படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ‘பக்கா’ படம் குறித்து இயக்குனர் எஸ்.எஸ்.சூர்யா பேசும்போது, ‘‘இதுவரை வெளிவந்த படங்களில் ஒரு காட்சியிலோ அல்லது ஒரு பாடல் காட்சியிலோ தான் திருவிழாவை பார்த்திருப்பீர்கள். ஆனால் ‘பக்கா’ படத்தை முழுக்க முழுக்க திருவிழா பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. ‘பக்கா’ ஜாலியான ஒரு காமெடி படமாக இருக்கும்! இந்த கதையை படமாக்க நான் சந்திக்காத தயாரிப்பாளர்களே இல்லை! ஆனால் நான் தேடி சென்று சந்திக்காத ஒரு தயாரிப்பாளரான சிவகுமார் சார் என்னை கூப்பிட்டு இந்த கதையை படமாக்க முன் வந்தார். அவருக்கு என் வாழ்நாள் முழுக்க நன்றி கடன் பட்டுள்ளேன்...
ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்ட இயக்குனர் களஞ்சியத்தின் முந்திரிக்காடு பட முதல் போஸ்டர்..!

ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்ட இயக்குனர் களஞ்சியத்தின் முந்திரிக்காடு பட முதல் போஸ்டர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
முந்திரிக்காடு “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் இயக்குனர் சீமான் போலீஸ் அதிகாரியாக கதையின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ஆதி திரைக்களம் சார்பில் தயாரிக்கப்படும் முந்திரிக்காடு படத்தை மு.களஞ்சியம் இயக்குகிறார். நாயகனாக புகழ் என்பவர் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான C.மகேந்திரனின் மகன். கதாநாயகியாக சுபபிரியா நடிக்கிறார். மற்றும் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல்திரு, கலைசேகரன் , பாவாலட்சுமணன் ஆகியோரும் நடிக்கிறார்கள். முந்திரிக்காட்டு மக்களின் வாழ்கை யதார்த்தத்தை இதில் பிரதிபலித்திருக்கிறோம். விலையுயர்ந்த பொருளாக மாறிப்போன முந்திரியின் விளை நிலங்களில் சிந்தும் ஏழ்மையின் வியர்வை துளி எப்படிப்பட்டது என்பதை இதில் பதிவு செய்கிறோம். என்கிறார் இயக்குனர் களஞ்சியம். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வெளிய...

வைரமுத்துவுக்கு விஜயகாந்த் கண்டனம்…!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சிவகாசியில் பட்டாசு தொழிலை பாதுகாக்கக் கோரி தே.மு.தி.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அதனை தொடர்ந்து, விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று ஆண்டாள் தாயாரை தரிசனம் செய்தனர். அதன்பின்னர் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஆண்டாளை பற்றி இழிவாக பேசிய கவிஞர் வைரமுத்துவுக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும். ரஜினியும், கமலும் அரசியலில் எனக்கு ஜூனியர்கள். நான் சீனியர் என பேசினார். மேலும், வைரமுத்து மன்னிப்பு கேட்க கோரி போராட்டம் நடத்தி வரும் சடகோப ராமானுஜ ஜீயருக்கு விஜயகாந்த் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்....
20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து ஜனாதிபதி உத்தரவு

20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து ஜனாதிபதி உத்தரவு

HOME SLIDER, NEWS, செய்திகள்
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான ஆட்சியில், முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். அவர் தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் 21 பேரை பாராளுமன்ற செயலர்களாக நியமித்தார். இது அமைச்சருக்கு நிகரான பதவி ஆகும். இதனால், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 21 எம்.எல்.ஏ.க்கள், ஆதாயம் தரும் கூடுதல் பதவியை வகித்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. தேர்தல் ஆணையத்திலும் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன. இரட்டை ஆதாய புகாரில் சிக்கிய 21 எம்.எல்.ஏ.க்களில் ஜர்னைல் சிங் ராஜினாமா செய்ததால்  அவர் மீதான குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. மற்ற 20 பேர் மீதான புகார் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, இரட்டை பதவி விவகாரம் தொடர்பாக,  ஆதாயம் தரும் பதவி வகிக்கக் கூடாது என்ற விதியின் கீழ் 20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய...
காலா பட டப்பிங் தொடங்கினார் ரஜினிகாந்த்..!

காலா பட டப்பிங் தொடங்கினார் ரஜினிகாந்த்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ரஞ்சித் இயக்கத்தில் மிக பிரமாண்டமான செலவில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகிவரும் காலா படப்பிடிப்பு முடிந்து அடுத்தகட்ட பணிகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக டப்பிங் பணிகளில் ரஜினிகாந்த் பிசியாகியிருக்கிறார். இதற்காக டப்பிக் தியேட்டருக்கு வந்த ரஜினியை டப்பிங் தியேட்டர் நிர்வாகி கல்யாணம் வரவேற்றார். அவரோடு காலா இயக்குனர் ரஞ்சித் உடனிருந்தார்....
தமிழ் எழுத்தாளர்களின் ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்கள் வெளியீடு!

தமிழ் எழுத்தாளர்களின் ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்கள் வெளியீடு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
Paulo Coelho, Haruki Murakami, Orhan Pamuk என பிறமொழிகளில் எழுதும் எழுத்தாளர்களை நாம் நம்மில் ஒருவராக அறிந்திருப்பதற்குக் காரணம் அப்புத்தகங்களின் தரமான ஆங்கில மொழிபெயர்ப்பே. நம்மிடம் நோபல் பரிசு வாங்குவதற்குகந்த தரம்மிக்க எழுத்தாளர்கள் இருந்த போதிலும், அவர்கள் யாராலும் கண்டுபிடிக்கப்படாத குகைச் சித்திரங்களைப் போல் அறியப்படாமல் இருப்பது மனவேதனையை தரும் விஷயம். இக்குறையை போக்குவதற்காக எடுக்கப்பட்ட முயற்சியே ஜீரோ டிகிரி பப்ளிஷிங் (Zero Degree Publishing). இவர்கள் மூலம் சாரு நிவேதிதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தர்ராஜன் ஆகியோர் எழுதிய தமிழ் நூல்களை, ஸீரோ டிகிரி பப்ளிஷிங் என்ற பதிப்பகம், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, நூலாக வெளியிட்டிருக்கிறது. இதன் அறிமுக விழா சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் எழுத்தாளர்கள், சாருநிவேதிதா, பா...
ஜெ., பிறந்த நாளில் EPS-OPS  ஆதரவாக உதயமாகிறது அம்மா டிவி, நமது அம்மா நாளிதழ்..!

ஜெ., பிறந்த நாளில் EPS-OPS ஆதரவாக உதயமாகிறது அம்மா டிவி, நமது அம்மா நாளிதழ்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அ.தி.மு.க., அதிகாரபூர்வ நாளிதழாக இருந்த, ‘நமது எம்.ஜி.ஆர்.,’ மற்றும் ஜெயா, ‘டிவி’ ஆகியவை, தற்போது சசிகலா குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் உள்ளன. அவர்களை, அ.தி.மு.க.,விலிருந்து ஓரங்கட்டி விட்டதால், அ.தி.மு.க.,விற்கென புதிய நாளிதழ் மற்றும், ‘டிவி’ துவக்க, ஒருங்கிணைப்பாளர்,பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர்,பழனிசாமி ஆகியோர் முடிவு செய்துள்ளனர். நம் தமிழகத்தில் உள்ள எல்லாக் கட்சிகளும் தங்களுக்கெனத் தனியாக தொலைக்காட்சி வைத்துள்ளன. ஆனால் சசிகலாவிடமிருந்து ஓபிஎஸ் தலைமையில் தனி அணியாக பிரிந்தபிறகு அவர்களுக்கென ஒரு தனி தொலைக்காட்சி இல்லாமல் தவித்து வந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் ஜி டிவி என்ற பெயரில் இயங்கி வந்த சேனல் ஒன்று தொடர்ச்சியாக நடத்த முடியாமல் மூடப்பட்டது. அந்த சேனலை ஓபிஎஸ் அணி விலை பேசி வாங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக பல கோடிகள் கைமாறியதாகவும் தெரிகிறது. அந்த தொலைக்காட்சி...
“எனக்கு கிடைக்கும் ஹீரோக்களை ரஜினி- கமலாக பார்க்கிறேன்” – இயக்குனர் பூபதி பாண்டியன்!

“எனக்கு கிடைக்கும் ஹீரோக்களை ரஜினி- கமலாக பார்க்கிறேன்” – இயக்குனர் பூபதி பாண்டியன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கமர்ஷியல் படங்களை நூறு சதவீதம் நகைச்சுவை கியாரண்டியுடன் தரக்கூடியவர் தான் இயக்குனர் பூபதி பாண்டியன். இவர் வசனங்கள் எழுதிய வின்னர், கிரி ஆகிய படங்களின் காமெடி காட்சிகள் தான் இப்போதும் டாப் டென் காமெடிகளில் இடம்பிடித்திருக்கின்றன. அதேபோல இவர் இயக்கிய தேவதையையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கோட்டை உள்ளிட்ட படங்களில் உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன் நகைச்சுவைக்கும் சரிவிகித முக்கியத்துவம் கொடுத்திருந்தார். அப்படிப்பட்டவரின் இயக்கத்தில் விமல் - ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘மன்னர் வகையறா’ படம், வரும் ஜன - 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பிரபு, சரண்யா பொன்வண்ணன், ரோபோ சங்கர், சாந்தினி, கார்த்திக் குமார், வம்சி கிருஷ்ணா, யோகிபாபு உள்ளிட்ட முக்கிய நட்சத்திர பட்டாளத்துடன் கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்தப்படம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார் இயக்குனர் பூபதி பா...
சென்சாரில் ‘யு/ஏ’: பிப்.9-ம் தேதி வெளியாகிறது ‘கலகலப்பு 2’

சென்சாரில் ‘யு/ஏ’: பிப்.9-ம் தேதி வெளியாகிறது ‘கலகலப்பு 2’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
'கலகலப்பு 2' படத்துக்கு சென்சாரில்  யு/ஏ சான்றிதழ் கிடைத்ததை தொடர்ந்து, பிப்ரவரி 9-ம் தேதி படம்  வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. டிசம்பரில் 'சங்கமித்ரா' படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக, அக்டோபரில் 'கலகலப்பு 2' படப்பிடிப்பைத் தொடங்கினார் சுந்தர்.சி. அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு தயாரித்து வந்தார். பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டது படக்குழு. ஆனால், பல்வேறு படங்கள் வெளியானதால் பொறுமை காத்தது. இறுதிக்கட்டப் பணிகள் அனைத்துமே முடிவடைந்ததைத் தொடர்ந்து, தணிக்கைக்கு விண்ணப்பித்தார்கள். 'யு/ஏ' சான்றிதழ் கிடைக்கவே, பிப்ரவரி 9-ம் தேதி 'கலகலப்பு 2' வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. காரைக்குடி, காசி மற்றும் சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தில் ஜீவா, ஜெய், கத்ரீன் தெரசா மற்றும...