கொள்ளையன் நாதுராமை பிடிக்க சினிமா பாணியில் துப்பாக்கி சூடு, கார் சேஸிங்,13 கிலோமீட்டர் துரத்தல்..!
சினிமா பாணியில் துப்பாக்கி சூடு, கார் சேஸிங்,13 கிலோமீட்டர் துரத்தல்..!
ஒருவழியாக சிக்கிய கொள்ளையன் நாதுராம்
சென்னை கொளத்தூரில் முகேஷ்குமார் என்பவரின் நகைக்கடையில் 3.5 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி, ரொக்கப் பணம் ரூ.2 லட்சம் கொள்ளை போனது. மேற்கூரையில் துளையிட்டுத் திருடப்பட்ட இந்த வழக்கில் தொடர்புடைய நான்கு வடமாநில ஆசாமிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களின் கூட்டாளிகளான நாதுராம் மற்றும் தினேஷ் சௌத்ரி எப்படியோ ராஜஸ்தானுக்குத் தப்பிச் சென்றனர். இவர்களைப் பிடிப்பதற்காக பெரிய பாண்டியன், முனிசேகர் தலைமையில் ஆறு பேர் கொண்ட தனிப்படை கடந்த டிசம்பர் 8ஆம் தேதி ராஜஸ்தான் சென்றது. அங்கு கொள்ளையர் களைக் கண்டறிந்து நெருங்கும்போது இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் முதலில் இந்தக் கொள்ளை சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான நாதுராம் தான் சுட்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. பின்பு, பெ...









