Author: Kodanki
குடியரசு தினத்தை குறிவைக்கும் சுந்தர்.சி-யின் ‘கலகலப்பு-2’
குடியரசு தினத்தை குறிவைக்கும் சுந்தர்.சி-யின் ‘கலகலப்பு-2’
சுந்தர்.சி-யின் அவ்னி சினிமேக்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கலகலப்பு-2’. சுந்தர். சி இயக்கத்தில் ‘கலகலப்பு’ படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, கேத்தரின் தெரசா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நந்திதா சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். சதீஷ், ரோபோ ஷங்கர், மனோ பாலா, விடிவி கணேஷ், வையாபுரி, சந்தான பாரதி, விச்சு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தில் ஏற்கனவே ஒரு சிங்கிள் டிராக் ஒன்று வெளியாகியிருக்கும் நிலையில், பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி சமீபத்தில் வெளியான இந்த படத்தின் கலர்புல்லான டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு ரிலீஸ் செய்...
காதலர் தினத்தை குறிவைத்து பிப்ரவரி 9-ம் தேதி பாலாவின் ‘நாச்சியார்’ ரிலீஸ்..!?
காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 9-ஆம் தேதி பாலாவின் 'நாச்சியார்’ ரிலீஸ்..!
பி ஸ்டூடியோஸ் மூலம் பாலா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘நாச்சியார்’. ஜி.வி.பிரகாஷ் குமார் ஜோதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தை ராக்லைன் வெங்கடேஷ், காவ்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜோதிகா இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக வலம் வருகிறார்.
நாச்சியார் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ஏகோபத்திய வரவேற்பை பெற்ற நிலையில், டீசரின் முடிவில் ஜோதிகா பேசம் கெட்ட வார்த்தையால் படம் சர்ச்சையிலும் சிக்கியது. இதையடுத்து படத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி படம் காதலர் தினத்தை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இளையராஜா இசையில் பாடல்கள் மற்றும் டிரைலர் வ...
ரசிகர்களோடு ‘சொடக்கு’ பாடலுக்கு சூர்யா குத்தாட்டம்..!
ரசிகர்களோடு 'சொடக்கு' பாடலுக்கு சூர்யா குத்தாட்டம்..!
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் உருவாகி இருக்கும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டகியுள்ளது.
குறிப்பாக ‘சொடக்கு மேல...’ என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் எதிரொலித்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் படத்தின் புரொமோஷனுக்காக சென்ற சூர்யா அங்கு ரசிகர்களுடன் 'சொடக்கு' பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறார்
கேரளாவில் சூர்யாவுக்கு நல்ல மார்க்கெட் இருந்து வருகிறது.
அதனால், அவரது படங்கள் வெளியாகும்போது கேரளாவிலும் புரொமோஷன் பணிகளைச் செய்வது வழக்கம். அதன்படியே, இந்த முறையும் கொச்சினில் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட...
எட்டாவது நாள்… தீர்வை எட்டாமல் நீளும் போக்குவரத்து போராட்டம்… அரசின் அலட்சியமா…!
எட்டாவது நாள்... தீர்வை எட்டாமல் நீளும் போக்குவரத்து போராட்டம்... அரசின் அலட்சியமா...!
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் இன்று நல்ல முடிவுக்கு வரும் என நம்பப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு ஒருசில தினங்களே உள்ள நிலையில் தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மொத்த தமிழகமும் இன்று வழங்கப்படும் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச, சிஐடியூ உட்பட பல்வேறு தொழிற்சங்கங்களும் கடந்த ஜனவரி 4ஆம் தேதி முதல் போராட்டம் நடத்திவருகின்றன. இன்றுடன் போராட்டம் எட்டாவது நாளை எட்டியுள்ளது.
இதுதொடர்பாக நேற்று உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது மனசாட்சியோடு முடிவு செய்து போக்குவரத்து ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்...
ஜல்லிக்கட்டில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் – அரசுக்கு மிருகநல வாரியம் கடிதம்
ஜல்லிக்கட்டில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் - தமிழக அரசுக்கு மிருகநல வாரியம் கடிதம்
ஜல்லிக்கட்டில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தேசிய மிருகநல வாரியம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இதுதொடர்பாக தேசிய மிருகநல வாரியத்தின் செயலாளர் எம்.ரவிக்குமார், தமிழக அரசின் தலைமை செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஐ.ஜி.க்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
* அரசு அறிவித்துள்ள இடங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்.
* ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் ஜல்லிக்கட்டு தொடர்பான நிகழ்ச்சிகள் மிருகவதை தடை சட்டத்தின் கீழ் வரையறுத்துள்ளபடி பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை கலெக்டர்கள் உறுதிபடுத்தி கொள்ள வேண்டும்.
* ஜல்லிக்கட்டு பற்றிய தகவல் மற்றும் பதிவு செய்யப்பட்ட காளைகள் குறித்த தகவல்களை ஒரு மாதத்துக்கு முன்பே மாநில மிருகநல வாரியத்துக்கு கலெக்டர்கள் தெரிவிக்க...
செங்கோட்டையனை முதலமைச்சர் ஆக்கவே கவர்னரிடம் மனு கொடுத்தோம்: டி.டி.வி. தரப்பு வக்கீல் வாதம்
செங்கோட்டையனை முதலமைச்சர் ஆக்கவே கவர்னரிடம் மனு கொடுத்தோம்: டி.டி.வி. தரப்பு வக்கீல் வாதம்
டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக செயல்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்த வழக்கின் விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு கொறடா ராஜேந்திரன் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தஹியும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், டி.டி.வி.தினகரன் தரப்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமனும் ஆஜராகி வாதாடினர்.
அப்போது நடந்த விவாதம் வருமாறு:-
வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன்:- சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடியாது.
வக்கீல் பி.எஸ்.ராமன்:- சபாநாயகரின் நோட்டீசுக்கு பதில் அளிக்க ...
TTVதினகரனின் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி..!
தினகரனின் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி..!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், குக்கர் சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார் சசிகலாவின் உறவினரான தினகரன். ஜனவரி 8 தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தொடரில், அவர் சுயேச்சை உறுப்பினராகப் பங்கேற்றார். இந்த நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் பெற்ற வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அதில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து தினகரன் வெற்றி பெற்றார் என்றும், ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு நிறைய குக்கர்கள் விநியோகிக்கப்பட்டது என்றும், தேர்தல் ஆணையமே 30 லட்ச ரூபாயைக் கைப்பற்றியதாக அறிவித்தது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது இதனால் தினகரன் சட்டசபைக்குள் நுழையக்கூடாது என்றும், அவர் எம்எல்ஏவாக பணியாற்றத் தடை ...
வெள்ளித்திரையில் இந்திரா காந்தி ஆக மாறப்போகும் வித்யா பாலன்..!
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் வித்யா பாலன்
மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு இந்தியாவில் நடந்த மிகக் கொடூரமான சம்பவம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்ட நிகழ்ச்சியாகும். 16 ஆண்டு காலம் பிரதமராகப் பதவி வகித்த இந்தியாவின் முதல் மற்றும் கடைசி பெண்மணியான இந்திரா காந்தி 31-10-1984 அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்தியாவின் ‘இரும்பு பெண்மணி’ என்றழைக்கப்பட்ட இந்திரா காந்தியின் வாழ்க்கையில் நிகழந்த முக்கிய சம்பவங்களை தொகுத்து பிரபல தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளரும், எழுத்தாளருமான சகாரிகா கோஷ், ‘இந்திரா: இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த பிரதமர்’ என்ற நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.
பிரபல கவர்ச்சி நடிகை மறைந்த சில்க் ஸ்மிதா வேடத்தில் ’டர்ட்டி பிக்சர்’ படத்...


