செவ்வாய்க்கிழமை, ஜூலை 7
Shadow

Author: Kodanki

திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமில்லை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமில்லை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பா.ஜ.க வழக்கறிஞர் அஸ்வினி உபாத்தியா பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தேசிய கீதம் இசைப்பதை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் பலர் கருத்து தெரிவித்தனர். இது தொடர்பாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில்a நேற்று ஒரு மனுதாக்கல் செய்தது. அதில், தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்கிற உத்தரவை மாற்ற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. தேசிய கீதத்தை இசைப்பது தொடர்பான வழிமுறைகளை அமைச்சரவை குழு உருவாக்கும் வரை இதனை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இந்த குழுவை அமைத்து வழ...
பாண்டியராஜனின் ‘மெரினா புரட்சி’க்கு கை கொடுத்த சிவகார்த்திகேயன்..!

பாண்டியராஜனின் ‘மெரினா புரட்சி’க்கு கை கொடுத்த சிவகார்த்திகேயன்..!

CINI NEWS, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பாண்டியராஜனின் ‘மெரினா புரட்சி’க்கு கை கொடுத்த சிவகார்த்திகேயன்..! ‘பசங்க’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பாண்டிராஜ். இதனையடுத்து ‘வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, கதகளி, இது நம்ம ஆளு’ போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். இதில் 5 படங்களை அவரே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘பசங்க புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார். தற்போது, ‘பசங்க புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் புதிய படத்தை தயாரித்து வருகிறார். அந்தப் படத்திற்கு ‘மெரினா புரட்சி’ என தலைப்பு சூட்டியுள்ளனர். கடந்த வருடம் ஜனவரி 8ம் தேதி ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மெரினாவில் தொடங்கி நடைபெற்ற போராட்டத்தை மையப்படுத்திய திரைப்படமாம் இது. எம்.எஸ்.ராஜ் என்பவர் இயக்கி வரும் இப்படத்திற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், அல்ருஃபியான் இசையமைப்பாளராகவும், தீபக் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகின்ற...
பொங்கல் ரேசில் களமிறங்கிய  சூர்யா,விக்ரம்,பிரபுதேவா..!

பொங்கல் ரேசில் களமிறங்கிய சூர்யா,விக்ரம்,பிரபுதேவா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பொங்கல் ரேசில் களமிறங்கிய சூர்யா,விக்ரம்,பிரபுதேவா..! இந்தாண்டு பொங்கல் பண்டிகையின்போது ரசிகர்களை திருப்திபடுத்த 7 படங்கள் களத்தில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார்போல பல படங்கள் ஜனவரி வெளியீடு என்று பல நாட்களுக்கு முன்பே விளம்பரங்களும் வெளியிட்டு வந்தன. இந்த நிலையில், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், பிரபுதேவாவின் குலேபகாவலி, விக்ரமின் ஸ்கெட்ச் என 3 படங்கள் மட்டுமே பொங்கல் விருந்தாக ரிலீஸ் ஆக உள்ளது. பொங்கலுக்கு இரு தினங்களுக்கு முன்பே 12ம் தேதியே இந்த படங்கள் ரிலீஸ் ஆகிறது. இதுதவிர அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகி இருக்கும் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்', விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் `மதுர வீரன்', விமல் நடிப்பில் `மன்னர் வகையறா' உள்ளிட்ட படங்களும் பொங்கல் ரேசில் கலந்து கொள்ள முயற்சித்தன. இதில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட தயாரிப்பாளர் மீது ஒன்றரை க...
டி.டி.வி தினகரன் வெற்றியை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு..!

டி.டி.வி தினகரன் வெற்றியை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
டி.டி.வி தினகரன் வெற்றியை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு கடந்தாண்டு டிசம்பர் 21-ம் தேதி சென்னை ஆர்,கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில், சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி தினகரன் வெற்றி பெற்றார். இந்நிலையில், வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி சென்னை ஐகோர்ட்டில் தினகரன் வெற்றி பெற்றதற்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார். அதில், சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட டி.டி.வி தினகரன் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் வெற்றி பெற்றிருக்க முடியாது. அவருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கிய பிறகு ஆர்.கே.நகரில் அதிக அளவில் குக்கர்கள் கிடைத்துள்ளன. 30 லட்சம் ரூபாய் அந்த தொகுதியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. எனவே, அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தினகரன் சட்டபேரவைக்கு செல்ல தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொள...
அண்ணாதுரையால் 4 கோடி நஷ்டம்… விஜய் ஆண்டனிக்கு ரெட் தடை… சிக்கலில் கிருத்திகாவின் காளி..!

அண்ணாதுரையால் 4 கோடி நஷ்டம்… விஜய் ஆண்டனிக்கு ரெட் தடை… சிக்கலில் கிருத்திகாவின் காளி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அண்ணாதுரையால் 4 கோடி நஷ்டம்... விஜய் ஆண்டனிக்கு ரெட் தடை... சிக்கலில் கிருத்திகாவின் காளி..! நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகதன்மை கொண்டவர் விஜய் ஆண்டனி. வெளி தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்க எட்டு கோடி சம்பளம் கேட்கும் இவரிடம்தயாரிப்பு செலவுக்கு 6 கோடியையும் கொடுத்தால்முதல் பிரதி அடிப்படையில் படம் எடுத்து கொடுப்பார் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் அண்ணாதுரை.இப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை 6.50 கோடிக்கும், கேரள உரிமையை 32 லட்சத்திற்கும் அலெக்சாண்டர் என்பவர் வாங்கினார், விஐய் சேதுபதி நடிப்பில் தயாரான கருப்பன் படத்தை ஏற்கெனவே வாங்கி ரீலீஸ் செய்திருந்தார். அண்ணாதுரைபடம் வெளியான முதல் நாளே வசூலில் மூச்சு திணறியது.தமிழ்நாட்டில் 2.50 கோடி மட்டும் வசூல் செய்த அண்ணாதுரை 4 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கேரளாவில் 10 லட்சம் வசூல் செய்து ...
முழுதும் வெளி நாட்டில் ஹாலிவுட் கலைஞர்களோடு மாதவனை இயக்கும் சற்குணம்..!

முழுதும் வெளி நாட்டில் ஹாலிவுட் கலைஞர்களோடு மாதவனை இயக்கும் சற்குணம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
முழுதும் வெளி நாட்டில் ஹாலிவுட் கலைஞர்களோடு மாதவனை இயக்கும் சற்குணம்..! சற்குணம் இயக்கத்தில் மாதவன் நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு முழுக்க காடுகள் சார்ந்த பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது. 'விக்ரம் வேதா' படத்தைத் தொடர்ந்து 'மகளிர் மட்டும்' படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்தார் மாதவன். தமிழில் பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தாலும், எதிலுமே ஒப்பந்தமாகாமல் இருந்தார். நீண்ட நாட்களாக சற்குணம் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க மாதவனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள். தற்போது மாதவன் அப்படத்தில் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தமாகி இருக்கிறார். முழுக்க வெளிநாடுகளிலும், அடர்ந்த காடுகளுக்குள்ளும் இப்படத்தை உருவாக்கவுள்ளார்கள். கணேஷ் தயாரிக்கவுள்ள இப்படத்தை இயக்குவது மட்டுமன்றி, இணை தயாரிப்பாளராகவும் சற்குணம் பொறுப்பேற்கிறார். மாதவனை இயக்கவிருப்பது குறித்து சற்குணம் கூறியிருப்பதாவ...
அடுத்தடுத்து சர்ச்சைக்குள் சிக்கும் ரஜினி அரசியல் முதலில் தாமரை… இப்போது பாபா முத்திரை..! உரிமை கொண்டாடும் மும்பை நிறுவனம்

அடுத்தடுத்து சர்ச்சைக்குள் சிக்கும் ரஜினி அரசியல் முதலில் தாமரை… இப்போது பாபா முத்திரை..! உரிமை கொண்டாடும் மும்பை நிறுவனம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
அடுத்தடுத்து சர்ச்சைக்குள் சிக்கும் ரஜினி அரசியல் முதலில் தாமரை... இப்போது பாபா முத்திரை..! உரிமை கொண்டாடும் மும்பை நிறுவனம் அரசியல் அறிவிப்பை தொடர்ந்து ரஜினிகாந்த்துக்கு பல இடங்களில் இருந்து ஆதரவும், சில இடங்களில் இருந்து எதிர்ப்பும் அரசியல் தலைவர்களிடத்தில் இருந்து எழுந்துள்ளது. ரசிகர்கள் மட்டத்திலும் ஒரு மித்த கருத்து எதுவும் இன்னமும் உருவாகவில்லை. அதிலும், அரசியல் அறிவிப்பு செய்த நாளில் இருந்தே ரஜினிகாந்த் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். ரசிகர்கள் சந்திப்பின்போது எப்போதுமே ரஜினியின் மேடை அலங்காரத்தில் பாபா முத்திரை வெண் தாமரையின் பின் அலங்கரிக்கப்பட்டிருக்கும் வகையில் இருக்கும். ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு செய்வதற்கு முன்பு ரசிகர்களை சந்திக்கும்போதெல்லாம் என்ன பேசினாலும் அது சர்ச்சையை ஏற்படுத்தவில்லை. அவர் காட்டுகிற அல்லது பேசுகிற விஷயங்களும் பெரும்பாலும் அரசியல்வாதிகளா...
கருணாநிதி  என்னை அடையாளம் கண்டு பெயரைச்சொல்லி அழைத்தது உணர்ச்சிப்பூர்வமான சந்திப்பு  – வைகோ

கருணாநிதி என்னை அடையாளம் கண்டு பெயரைச்சொல்லி அழைத்தது உணர்ச்சிப்பூர்வமான சந்திப்பு – வைகோ

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கருணாநிதி என்னை அடையாளம் கண்டு பெயரைச்சொல்லி அழைத்தது உணர்ச்சிப்பூர்வமான சந்திப்பு - வைகோ கருணாநிதியை கோபலபுரத்தில் சென்று சந்தித்த வைகோ உணர்ச்சிகரமான சந்திப்பு என்று கூறினார். தன்னை அடையாளம் கண்டு பெயரைச்சொல்லி அழைத்தது உணர்ச்சிப்பூர்வமான சந்திப்பு என்றார். திமுக செயல் தலைவர் ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரவு 7 மணி அளவில் அவரது இல்லத்தில் சந்தித்தார். அவரோடு தனியாக ஆலோசனை நடத்திய வைகோ அவரது காரிலேயே அவருடன் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்றார். இரவு 8 மணி அளவில் கருணாநிதியை வைகோ சென்று பார்த்தார். அப்போது, யார் என்று தெரிகிறதா? என்று ஸ்டாலின் கருணாநிதியிடம் கேட்டவுடன், புன்னகை பூத்தவாறு வைகோ என கருணாநிதி உணர்த்தினார். சந்தித்துவிட்டு வெளியே வந்தபின் நிருபர்களிடம், “அரசியலில் என்னை வளர்த்து ஆளாக்கிய, இமைப்பொழுதும் நெஞ்சில் நீங்காது என்னை இயக்கிய அண்ணன் கருணாநிதி அவர்களைப் ...
பிச்சை எடுக்கவா மலேசியா கலைவிழா… நடிகர் சங்க  டிரஸ்ட் பதவியை ராஜினாமா செய்து எஸ்.வி.சேகர் காட்டமான கடிதம்

பிச்சை எடுக்கவா மலேசியா கலைவிழா… நடிகர் சங்க டிரஸ்ட் பதவியை ராஜினாமா செய்து எஸ்.வி.சேகர் காட்டமான கடிதம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் சங்க கட்டடத்தை கட்டுவதற்காக நிதி திரட்ட மலேசியாவில் விழா நடத்தியது நடிகர் சங்கம். இந்த விழா இப்போது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக நடிகர் சங்க தலைவர் நாசருக்கு நடிகர் எஸ்.வி.சேகர் காட்டமான கடிதம் எழுதி இருக்கிறார்.   திரு. நாஸர் தலைவர் ​ மற்றும் நிர்வாகிகள் ​ தென்னிந்திய நடிகர் சங்கம். வணக்கம். நம் சங்க தேர்தல் முடிந்தபின் என்னை நடிகர் சங்க டிரஸ்டிக்களில் ஒருவனாக நியமித்து என்னுடைய அறிவுரை,ஆலோசனைகள்,வழி நடத்துதல் தேவை என கேட்டுக்கொண்டீர்கள். ஆனால் ஒரு வருடத்தில் பல மாற்றங்கள். கையெழுத்திடுவதற்கு மட்டும் டிரஸ்டி என்ற நிலை வந்த போது நான் பல மெயில்கள் அனுப்பியதற்கு எந்த பதிலும் அளிக்காமல் எனக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினீர்கள். என் பதில் கடிதத்தில் கேட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்கவில்லை. குறிப்பாக நம் நடிகர் சங்கம் 5 கிரவுண்டு அளவி...