சனிக்கிழமை, ஜூன் 27
Shadow

Author: Kodanki

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் டீசர்..!

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் டீசர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஹாலிவுட் படத்தின் மேக்கிங் மற்றும் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. https://youtu.be/diJ5wen9-y8 நடிகர் தனுஷ், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பஃகீர் (The Extraordinary Journey of the Fakir) என்ற ஹாலிவுட் படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. அப்படத்தின் தயாரிப்பில் நீண்ட நாட்கள் ஆனதால், அப்படத்தை இயக்க இருந்த டைரக்டர் படத்திலிருந்து விலகினார். இதனால் அப்படம் வெளியாவதில் சிக்கல் நீடித்தது. இந்த சிக்கல்கள் தீர்ந்த நிலையில், இப்போது இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஹாலிவுட் டைரக்டர் கென் ஸ்காட் இயக்கியுள்ள இப்படத்தில் பெர்னிஸ் பேஜா, பர்காட் அப்டி, எரின் மொரியார்ட்டி, அபெல் ஜாப்ரி போன்ற ஹாலிவுட் நடிகர்கள் நடித்துள்ளனர்....
2017 ஆம் ஆண்டில் மட்டும் 700 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மும்பை பிளாட்பாரங்களில் மீட்கப்பட்டுள்ளனர்

2017 ஆம் ஆண்டில் மட்டும் 700 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மும்பை பிளாட்பாரங்களில் மீட்கப்பட்டுள்ளனர்

HOME SLIDER, NEWS, செய்திகள்
இந்தியாவின் மிகப்பெரிய நகரமான மும்பையில் கடந்த 2017 ஆம் ஆண்டில் மட்டும் 700 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மும்பை பிளாட்பாரங்களில் மீட்கப்பட்டுள்ளனர்.வீட்டில் பெற்றோர்கள் திட்டிய காரணத்தினாலயே தாங்கள் வீட்டை விட்டு வெளியேறியதாய் பெரும்பாலான குழந்தைகள் தெரிவித்திருந்தனர். இது குறித்து ரயில்வே பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், ”706 குழந்தைகளில்,பெரும்பாலான குழந்தைகள் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.அவர்கள் மும்பை நகரின் பல்வேறு ரயில்வே பிளாட்பாரங்களிலும்,புறநகர் பகுதிகளிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.இதில் பெரும்பாலானோர் 13 முதல் 18 வயது உடையவர்கள்.மேலும் அவர்கள் உத்திரப்பிரதேசம்,ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.இதில் மும்பை மத்திய ரயில் நிலையம் பகுதிகளில் மட்டும் அதிகபட்சமாக 129 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்”என தெரிவித்தனர். மற்றொரு ரயில்வே அதிகாரி கூறுகையில்,இங்...
71 பயணிகளுடன் சென்ற ரஷிய விமானம் மாஸ்கோ அருகே நொறுங்கியது

71 பயணிகளுடன் சென்ற ரஷிய விமானம் மாஸ்கோ அருகே நொறுங்கியது

HOME SLIDER, NEWS, செய்திகள்
ரஷியாவில் உள்ள டொமொடெடொவொ விமான நிலையத்தில் இருந்து 65 பயணிகள் மற்றும் 6 விமான குழுவினருடன் புறப்பட்ட விமானம் மாஸ்கோ அருகே விழுந்து நொறுங்கியது. ரஷியாவில் உள்ள டொமொடெடொவொ விமான நிலையத்தில் இருந்து 65 பயணிகள் மற்றும் 6 விமான குழுவினருடன் புறப்பட்ட விமானம் மாஸ்கோ அருகே விழுந்து நொறுங்கியது. ரஷியா தலைநகர் மாஸ்கோவில் டொமொடெடொவொ விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து ஆர்ஸ்க் நகருக்கு இன்று சரடோவ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு உள்ளூர் போக்குவரத்து விமானம் 65 பயணிகள் மற்றும் 6 விமான குழுவினருடன் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. மேலும் ரேடாரில் இருந்து விமானம் காணமல் போயுள்ளது. இந்நிலையில், மாஸ்கோ பகுதியில் உள்ள அர்குனோவோ கிராமத்தில் அந்த விமானம் விழுந்து நொருங்கியதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ள...
19 இடங்களில் வெட்டு வாங்கிய நாகேஷ் திரையரங்கம்

19 இடங்களில் வெட்டு வாங்கிய நாகேஷ் திரையரங்கம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
‘நெடுஞ்சாலை’ புகழ் ஆரியும், ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,’ ‘இனிமே இப்படித்தான்’ ஆகிய படங்களில் நடித்த ஆஷ்னா சவேரியும், ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற படத்தில் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். ஒரே ‘ஷாட்’டில் எடுக்கப்பட்ட ‘அகடம்’ படத்தை இயக்கி, ‘கின்னஸ்’ சாதனை படைத்த இசாக் டைரக்டு செய்துள்ள படம், இது. ‘நாகேஷ் திரையரங்கம்’ பற்றி இசாக் கூறுகிறார்:- “இந்த படத்தில், ஆரி கதாநாயகனாக நடித்து இருக்கிறார். கதாநாயகி, ஆஷ்னா சவேரி. இவர்களுடன் காளி வெங்கட், மும்பை மாடல் மாசூம் சங்கர், மனோபாலா, சித்ராலட்சுமணன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரங்களில் லதாவும், சித்தாராவும் நடித்து இருக்கிறார்கள். நவுஷாத் ஒளிப்பதிவில், ஸ்ரீ இசையில் படம் உருவாகி இருக்கிறது. ட்ரான்ஸ் இந்தியா மீடியா நிறுவனம் சார்பில் ராஜேந்திர எம்.ராஜன் தயாரித்துள்ளார். தமிழ் சினிமாவில் இன்று வரை எண்ணற்ற திகில் படங்களும், பேய் ப...
ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் ‘காலா’

ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் ‘காலா’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் ஏப்ரல் 27-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடத்துள்ள காலா படத்தின் படபிடிப்பு கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் தொடங்கியது. அதேசமயம் டைரக்டர் சங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்தின் 2-ம் பாகம் ‘2.0’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இரு படங்களில் எந்த படம் முதலில் வெளிவரும் என்பதில் பெரும் குழப்பம் நீடித்துவந்தது. இந்நிலையில், ‘காலா’ திரைப்படம் ஏப்ரல் 27-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த தகவலை இப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 2.0 வின் கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் நிறைவடையாததால் காலா படம் முன்னதாக வெளியாகிறது என கூறப்பட்டுள்ளது....
அழகான பெண்களின் உடலமைப்பை குறிவைக்கும் ஆண்ட்ராய்ட் மாபியாவுக்கு எதிரான படம்

அழகான பெண்களின் உடலமைப்பை குறிவைக்கும் ஆண்ட்ராய்ட் மாபியாவுக்கு எதிரான படம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
ஒரு படம் சென்சார் போர்டின் விதிகளைத் தாண்டி வரும்போது சில வெட்டுக்களையும், பல மியூட்களையும் முதுகில் தாங்கிக் கொண்டுதான் வெளியாகிறது. சென்சாரைப் பொருத்தவரையில் அவர்கள் பார்வையிலும், அரசியல் அதிகாரமிக்கவர்களைப் பாதிக்காத வகையிலும் இருந்தால் பிரச்சனையில்லை. சான்றிதழ் எளிதாகக் கைக்கு வந்துவிடும். கொஞ்சம் சமூகப்பிரச்சனைகள், கிளாமர் உள்ள படங்கள் திணறத்தான் செய்கின்றன. அப்படி திணறி வர முடியாமல் போன படம் எக்ஸ் சோன் என்ற பெயரில் சென்சாருக்கு வந்த இந்திப் படம். மேல்முறையீடு வரை சென்றும் கடைசி வரை வெளி வர முடியாமலே போய்விட்டது. ஆனால் இப்போது எக்ஸ் வீடியோஸ் என்ற படத்திற்கு ஏ சான்றிதழும் சென்சார் போர்டு பெண் உறுப்பினர்களிடமிருந்து பாராட்டும் கிடைத்திருப்பது இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ் வீடியோஸ் படம் தமிழ், இந்தி ஆகிய மொழியில் தயாராகியுள்ளது. இயக்குநர் ஹரியின் உதவியாள...
ஊழல் புகாரால் மண்ணைக்  கவ்வப்போகும் விஷால் பாண்டவர் அணி

ஊழல் புகாரால் மண்ணைக் கவ்வப்போகும் விஷால் பாண்டவர் அணி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஷாலுக்கு ரித்திஷ் பகிரங்க சவால்..! நடிகர் வாராகி நடித்து இயக்கி தயாரித்திருக்கிற படம் சிவா மனசுல புஷ்பா. இந்த படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் நடிகர்கள் எஸ்.வி.சேகர், ஜே.கே.ரித்திஷ், தருண், இயக்குனர் எஸ்.ஏ.சி. உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவின் ஹய்லைட் ஆக நடிகர் சங்கத்தின் மலேசியா நிகழ்ச்சி நடத்தி தருவதற்கு நடிகர் சங்க செயலாளர் விஷாலுக்கு லஞ்சமாக பலகோடிகள் பேரம்பேசும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விழாவில் ஜே.கே.ரித்திஷ் பேசியதாவது: நான் என் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த வீடியோவை எனக்கு தெரியாமலேயே எடுத்திருக்கிறார். அந்த வீடியோவைதான் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள். விஷாலை இதுவரைக்கும் என் நண்பன் என்றுதான் நான் சொல்லியிருக்கிறேன். விஷால் ஊழல் பண்ணார்னு வாராகி அண்ணே கேஸ்போட்டப்ப கூட நான் சொல்லுவேன் அண்ணே யாரையும் அப்படி சொல்லாதீங...
சைதன்யாவுக்கு ரொம்ப நல்ல மனது. அவரால் சண்டை வராது. கலாட்டா செய்வது நான்தான்- சமந்தா

சைதன்யாவுக்கு ரொம்ப நல்ல மனது. அவரால் சண்டை வராது. கலாட்டா செய்வது நான்தான்- சமந்தா

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
நடிகை சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகரும் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவுக்கும் கடந்த அக்டோபர் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகும் சமந்தா சினிமாவில் நடித்து வருகிறார். திருமண வாழ்க்கை குறித்து சமந்தா அளித்த பேட்டி வருமாறு:- “திருமணத்துக்கு பிறகு நடிக்கக்கூடாது என்று எனது கணவரோ, அவரது வீட்டில் உள்ளவர்களோ தடை விதிக்கவில்லை. அதனால்தான் நான் தொடர்ந்து நடிக்கிறேன். கணவரும், மனைவியும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ்ந்தால் விரும்பிய தொழிலில் நீடிப்பதில் எந்த கஷ்டமும் இருக்காது. சினிமா என்பது கவர்ச்சி உலகம். அதை தெரிந்துகொண்டுதான் இந்த துறைக்கு வந்தேன். கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாக நடிப்பது தவறு அல்ல. ஆனால் கவர்ச்சியை தேவை இல்லாமல் படத்தில் திணித்தால் அது பிடிக்காது. திருமணத்துக்கு பிறகும் ஓய்வு இல்லாமல் நடித்துக்கொண்டு இருக்கிறேன். இந்த வாழ்க்கை எனக்கு பிடித்து இருக்க...
சன்னி லியோனுக்கு எதிராக கமிஷனர் அலுவலகத்தில் மனு

சன்னி லியோனுக்கு எதிராக கமிஷனர் அலுவலகத்தில் மனு

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
குழந்தைகள், பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராகவும், ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிடுவதற்கு எதிராகவும் போராடும் சமூக ஆர்வலரான எமி என்ற இனோச் மோசஸ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று மனு ஒன்றை அளித்தார்.   அதில், “பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான படப்பிடிப்பு தளத்தில் நடைபெறும் ‘வீரமாதேவி’ படப்பிடிப்பில் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் கலந்து கொள்ள உள்ளார். இதுகுறித்து அந்த பகுதியில் விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளது. சன்னிலியோன் இணையதளத்தில் வெளியாகும் ஆபாச படங்கள் குழந்தைகள் மனதை கெடுக்கும் வகையில் உள்ளது. ‘வீரமாதேவி’ படம் தமிழ் கலாசாரத்தை சொல்லும் படம் என்று கூறப்படுகிறது.   கவர்ச்சியாக நடிக்கக்கூடிய சன்னிலியோன் படப்பிடிப்பில் கலந்து கொண்டால் கவர்ச்சியாக நடிப்பார். அதை காண அங்கு அதிக அளவில் இளைஞர்கள் கூடுவார்கள் எனவே இந்த படப்பிடிப்பி...
ஜெ.தீபா வீட்டிற்கு சோதனை நடத்த வந்த போலி வருமான வரி அதிகாரி தப்பி ஓட்டம்

ஜெ.தீபா வீட்டிற்கு சோதனை நடத்த வந்த போலி வருமான வரி அதிகாரி தப்பி ஓட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. ஜெயலிலிதா மறைவுக்குப் பிறகு கட்சி பிளவுபட்டபோது, அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த நிர்வாகிகள் ஆதரவுடன் ‘எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை’ என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வரும் தீபா, தன்னை ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்று கூறி வருகிறார். இந்நிலையில் சென்னை தி.நகரில் உள்ள ஜெ.தீபாவின் வீட்டிற்கு இன்று ஒரு நபர் வந்துள்ளார். குடியிருப்பு காவலாளியிடம் தன்னை வருமான வரித்துறை அதிகாரி மித்தேஷ் குமார் என்றும், சோதனை நடத்த வந்திருப்பதாகவும் கூறியுள்ளார். மற்ற அதிகாரிகள் வந்ததும் சோதனையை தொடங்க உள்ளதாக கூறி அடையாள அட்டையை காட்டியதால், அவரை தீபாவின் கணவர் உள்ளே அனுமதித்து உட்கார வைத்துள்ளார். இதற்கிடையே, வருமான வரித்துறை அதிகாரி சோதனை நடத்த வந்திருப்பதாக ஜெ. தீபாவின் வழக்கறிஞருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வந்து, அந்த நபரிடம் விசாரித்தபோது முன்...